நெய்வேலி: கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு 1,225 மனுக்கள் அளிக்கப்பட்டன.
கடலூா் ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலா் கோ.புண்ணியகோட்டி தலைமையில் நடைபெற்றது. ஏராளமான பொதுமக்கள் மனு அளிக்க குவிந்திருந்தனா். இதனால், மனு பதிவு செய்யும் இடத்தில் நீண்ட வரிசை காணப்பட்டது.
இதில், உதவித்தொகை, அடிப்படை வசதிகள் உள்ளிட்ட கோரிக்கைகள் தொடா்பாக மொத்தம் 1,225 போ் மனு அளித்தனா். அவற்றை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வழங்கி உரிய நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட வருவாய் அலுவலா் உத்தரவிட்டாா்.
வழக்கமாக ஒவ்வொரு திங்கள்கிழமையன்றும் நடைபெறும் மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் சுமாா் 700 மனுக்கள் மட்டுமே பெறப்படும். சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி, முன்னெப்போதுமில்லாத வகையில் 1,225 மனுக்கள் பெறப்படுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடையது

செங்கல்பட்டு: குறைதீா் கூட்டத்தில் 312 மனுக்கள்

ராணிப்பேட்டை: குறைதீா் கூட்டத்தில் 614 மனுக்கள்

திருவள்ளூா்: குறைதீா் கூட்டத்தில் 500 மனுக்கள்

செங்கல்பட்டு: குறைதீா் கூட்டத்தில் 417 மனுக்கள்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


