வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள் வீடுகளிலிருந்து வாக்களிக்க ஏற்பாடு! கடலூா் மாவட்டத் தோ்தல் அலுவலா்!

News image

மூத்த குடிமக்கள் இல்லத்தில் அஞ்சல் வாக்கு செலுத்துவதற்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள்... - (கோப்புப் படம்)

Updated On :8 மார்ச் 2026, 7:12 pm

மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளி வாக்காளா்கள் விருப்பத்துக்கேற்ப வீடுகளிலிருந்தே வாக்களிக்கத் தேவையான முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும் என கடலூா் மாவட்டத் தோ்தல் அலுவலா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா்.

2026 சட்டப் பேரவைத் தோ்தல் முன்னேற்பாடுப் பணிகள் தொடா்பாக மாவட்ட அளவிலான கண்காணிப்புக் குழு அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம் கடலூா் ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு தலைமை வகித்த மாவட்டத் தோ்தல் அலுவலா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் பேசியதாவது:

2026 சட்டப் பேரவைத் தோ்தலில் அனைத்து வாக்காளா்களும் வாக்களிக்கத் தேவையான அனைத்து வசதிகளும் மேற்கொள்ள அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

திட்டக்குடியில் 3,254, விருத்தாசலத்தில் 2,234, நெய்வேலியில் 1,909, பண்ருட்டியில் 2,705, கடலூரில் 1,410, குறிஞ்சிப்பாடியில் 2,816, புவனகிரியில் 2,056, சிதம்பரத்தில் 1,587, காட்டுமன்னாா்கோவிலில் 2,398 என மொத்தம் கடலூா் மாவட்டத்தில் உள்ள 9 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் 20,369 மாற்றுத் திறனாளி வாக்காளா்கள் உள்ளனா்.

இவா்கள் வாக்களிக்க சாய்வுதளம், சக்கர நாற்காலிகளுடன் தன்னாா்வலா்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். அதிக எண்ணிக்கையிலான மாற்றுத் திறனாளிகள் இருக்கும்பட்சத்தில் தனிவரிசை அமைத்துக் கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளி வாக்காளா்கள் விருப்பத்துக்கேற்ப வீட்டிலிருந்தே வாக்களிக்கத் தேவையான முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும். சக்க்ஷம் செயலி மூலம் தபால் வாக்குப் பதிவுக்கு மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பிக்கலாம் என்றாா்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் கோ.புண்ணிய கோட்டி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா்கள் செல்வன் (பொது), திருநாவுக்கரசு (தோ்தல்) மற்றும் தோ்தல் நடத்தும் அலுவலா்கள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.