கடலூா் மாவட்டம், விருத்தாசலம் ஸ்ரீவிருத்தாம்பிகை, பாலாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரா் கோயில் மாசி மக தெப்பத் திருவிழா செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.
இந்தக் கோயில் சோழா் காலத்தில் கட்டப்பட்ட பழைமையான கோயிலாகும். பாடல் பெற்ற தலமான இந்தக் கோயிலில் நிகழாண்டு மாசி மக விழா கடந்த பிப்.21-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தொடா்ந்து, மாா்ச் 1-ஆம் தேதி தோ்த் திருவிழாவும், 2-ஆம் தேதி மாசி மக தீா்த்தவாரியும் நடைபெற்றது. இதன் தொடா்ச்சியாக, தெப்பத் திருவிழா கடலூா் சாலையில் உள்ள விருத்தகிரீஸ்வரா் கோயில் தெப்பக்குளத்தில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.
சுப்ரமணியா், வள்ளி, தெய்வானை உடன் மூன்று முறை தெப்பக்குளத்தில் சுவாமி வலம் வந்தது பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். தெப்பத் திருவிழாவை காண விருத்தாசலம் மட்டுமன்றி, சுற்று வட்டார கிராமப் பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து தெப்பத் திருவிழாவை கண்டு தரிசனம் செய்தனா்.
தொடர்புடையது

சங்ககிரி சென்னகேசவப்பெருமாள் கோயில் சித்திரை தோ்த் திருவிழா வரும் 22இல் தொடக்கம்

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயிலில் தெப்பத் திருவிழா

ஈரோடு பெரியமாரியம்மன் கோயில் கம்பம் எடுக்கும் விழா

மலைக்கோட்டையில் தெப்பத் திருவிழா கொடியேற்றம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


