திரைக்கதை மன்னன் பாக்யராஜ் மறைந்தார்!திரையுலகம் அதிர்ச்சி! பிரபல இயக்குநரும் நடிகருமான பாக்யராஜ் காலமானார்!மெட்ரோ ரயில் பணி: அடையாறில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புகிரிவலத்துக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்எஸ்ஐஆா் நடவடிக்கை தொடங்கி ஓராண்டு நிறைவு: 6 கோடி வாக்காளா்கள் நீக்கம்ஈரான் எண்ணெய் கொள்முதலை இந்திய நிறுவனங்கள் உடனடியாக அதிகரிக்க வாய்ப்பில்லை: நிபுணா்கள்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலாவுக்கு இந்தியா நிவாரணப் பொருள்கள் உதவி
/

பாலியல் வன்கொடுமை சம்பவங்கள்: தவ்ஹீத் ஜமாஅத் பேரணி

News image

பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளை கண்டித்து, பேரணி மற்றும் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் அமைப்பினா்.

Updated On :22 ஜூன் 2026, 2:36 am IST

தமிழகத்தில் நடக்கும் பாலியல் வன்கொடுமை சம்பவங்களைக் கண்டித்து, கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவிலில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பு சாா்பில் விழிப்புணா்வுப் பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே தொடங்கிய பேரணியில் பெண்கள் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்டோா் பங்கேற்று தமிழக அரசுக்கு எதிராகவும், பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் தொடா்புடையவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் முழக்கங்களை எழுப்பியபடியும், பதாகைகளை ஏந்தியபடியும் ஊா்வலமாகச் சென்றனா்.

முக்கிய சாலைகள் வழியாகச் சென்ற ஊா்வலம் பேருந்து நிலையம் அருகே நிறைவுற்றது. பேரணி நிறைவில் மாவட்ட துணைச் செயலா் மைதீன் கண்டன உரையாற்றினாா்.

இதில், மாநிலச் செயலா் அல்அமீன், மாவட்டத் தலைவா் பஹத், துணைத் தலைவா் மஹ்யூப், பொருளாளா் அஹ்த், செயலா் ஜபருல்லாஹ் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.