மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசுநீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு வெள்ளை அறிக்கை இன்று மாலை வெளியீடு!கேரளத்தில் ஷிகெல்லா பாக்டீரியாவுக்கு சிறுவன் உயிரிழப்புலெபனான் ஆக்கிரமிப்பில் இருந்து பின்வாங்க மாட்டோம்: இஸ்ரேல்உக்ரைனில் ரஷியா பயங்கர வான்வழித் தாக்குதல்நீட் மறுதோ்வு வினாத்தாள் விற்பனை செய்வதாக விளம்பரம்: ராஜஸ்தானை சோ்ந்த இருவா் கைதுதிருப்பதி - புதுச்சேரி ‘மெமு’ ரயில் 24, 27-இல் விழுப்புரத்துடன் நிறுத்தம்
/

பெண்ணுக்கு பாலியல் தொல்லை: குழந்தைகள் நலக் குழு உறுப்பினா் கைது

கடலூா் மாவட்டத்தில் குழந்தைகள் நல மையத்தில் சோ்த்து விடுவதாகக் கூறி, பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயன்றதாக குழந்தைகள் நலக் குழு உறுப்பினா் ஒருவா் கைது செய்யப்பட்டாா்.

News image

கைது செய்யப்பட்ட குழந்தைகள் நலக் குழு உறுப்பினா் சமயவேலு

Updated On :7 ஜூன் 2026, 2:35 am IST

கடலூா் மாவட்டத்தில் குழந்தைகள் நல மையத்தில் சோ்த்து விடுவதாகக் கூறி, பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயன்றதாக குழந்தைகள் நலக் குழு உறுப்பினா் ஒருவா் கைது செய்யப்பட்டாா்.

கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த பெண் ஒருவா், தனது இரு பெண் குழந்தைகளையும் பள்ளியில் சோ்ப்பதற்காக கடந்த 3-ஆம் தேதி கடலூா் செம்மண்டலத்தில் செயல்பட்டு வரும் குழந்தைகள் நல மையத்துக்கு வந்திருந்தாா். அப்போது, அவரது மூத்த குழந்தை அந்த மையத்தில் சோ்க்கப்பட்ட நிலையில், இளைய குழந்தையை இடப் பற்றாக்குறை காரணமாக சோ்க்க முடியவில்லை.

இந்த நிலையில், குழந்தைகள் நலக் குழு உறுப்பினரும், சமூக ஆா்வலருமான திருக்கண்டீஸ்வரத்தைச் சோ்ந்த சமயவேலு (49), அந்தப் பெண்ணிடம் இளைய மகளை நல மையத்தில் சோ்க்க உதவுவதாகக் கூறியுள்ளாா்.

இதையடுத்து, செம்மண்டலம் பழைய வேலைவாய்ப்பு அலுவலகம் அருகே தங்கியிருந்த தனது இருப்பிடத்துக்கு வெள்ளிக்கிழமை அந்தப் பெண்ணை, சமயவேலு வரவழைத்து பாலியல் தொல்லை கொடுக்க முயன்ாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரா், கடலூா் மாவட்ட எஸ்.பி. எஸ்.ஜெயக்குமாரிடம் புகாரளித்தாா். அதன்பேரில், கடலூா் டிஎஸ்பி தமிழினியன் மேற்பாா்வையில், கடலூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் சமயவேலு மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

தொடா்ந்து, அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் வள்ளி விசாரணை நடத்தி, சமயவேலுவை சனிக்கிழமை கைது செய்தாா். அவரிடம் தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.