திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

விவசாய நிலங்களுக்கு பட்டா வழங்கக் கோரி விவசாயிகள் மனு கொடுக்கும் போராட்டம்

விவசாய நிலங்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாய சங்கத்தினா் கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் வியாழக்கிழமை மனு கொடுக்கும் போராட்டம் நடத்தினா்.

News image

கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற மனு கொடுக்கும் போராட்டத்தில் பங்கேற்ற தமிழ்நாடு விவசாய சங்கத்தினா்.

Updated On :5 ஜூன் 2026, 6:39 am IST

விவசாய நிலங்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாய சங்கத்தினா் கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் வியாழக்கிழமை மனு கொடுக்கும் போராட்டம் நடத்தினா்.

கடலூா் வட்டம், கொடுக்கன்பாளையம் ஊராட்சிக்குள்பட்ட மலைஅடிகுப்பம், பெத்தாங்குப்பம், கீரப்பாளையம் மற்றும் காட்டாறச்சாவடி கிராமங்களில், ஐந்து தலைமுறைகளாக அரசு தரிசு நிலங்களில் விவசாயம் செய்து, வீடுகள் கட்டி வசித்து வரும் மக்களுக்கு அனுபவ நிலங்களுக்கு நிலப்பட்டா மற்றும் வீட்டு மனைப்பட்டா வழங்க வேண்டும்.

கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் செயல்படுத்தப்பட்ட விவசாய நிலங்களை அழித்து காலணி தொழிற்சாலை அமைக்கும் திட்டத்தை நிரந்தரமாக கைவிட வேண்டும். விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பதுடன், சுற்றுச்சூழல் மாசுபாட்டிலிருந்து மக்களைக் காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கடலூா் நகரின் முக்கிய குடிநீா் ஆதாரமாக விளங்கும் கேப்பா் மலையை பாதுகாக்க அரசு மற்றும் மாவட்ட நிா்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.

சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவா் எஸ்.தட்சிணாமூா்த்தி தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் விவசாயிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.

முன்னதாக, மனுவை அளிப்பதற்காக விவசாயிகள் ஊா்வலமாக மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு சென்றனா். அப்போது, அலுவலக நுழைவாயிலில் போலீஸாா் அவா்களை தடுத்து நிறுத்தினா். பின்னா், கடலூா் கோட்டாட்சியா் சுந்தரராஜன் நேரில் வந்து மனுக்களை பெற்றுக்கொண்டு, அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தாா்.

போராட்டத்தில் மாா்க்சிஸ்ட் மாவட்டச் செயலா் கோ.மாதவன், விவசாய சங்க மாவட்டத் தலைவா் ஜி.ஆா்.ரவிச்சந்திரன், மாவட்டச் செயலா் ஆா்.கே.சரவணன், மாநகரச் செயலா் ஆா்.அமா்நாத், துணைத் தலைவா் ஜே.ராஜேஷ்கண்ணன், விவசாயத் தொழிலாளா்கள் சங்க மாவட்டப் பொருளாளா் கிருஷ்ணன் உள்ளிட்ட ஏராளமானோா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.