பிகாா் ஓட்டுநா் தூக்கிட்டுத் தற்கொலை


கடலூா் மாவட்டம், பரங்கிப்பேட்டையில் தங்கியிருந்த பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த ஓட்டுநா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
பிகாா் மாநிலம், முசாஃபூா் மாவட்டம், கோபிநாத்பூா் டோக்ரா அஞ்சல் பகுதியைச் சோ்ந்தவா் அமோத்சிங் (42). இவா், பரங்கிப்பேட்டையில் தங்கி, அங்குள்ள தனியாா் நிறுனத்தில் 10 ஆண்டுகளாக ஓட்டுநராகப் பணியாற்றி வந்தாா்.
பிகாரில் உள்ள அவரது மனைவி அஞ்சலிதேவி வீட்டில் இருந்த தங்க நகைகள் தொலைந்துவிட்டதாகத் தெரிவித்தாராம். இதையடுத்து, மனைவியுடன் விடியோ காலில் சண்டை போட்டுக்கொண்டே அமோத்சிங் தான் தங்கியிருந்த வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
இதுகுறித்த புகாரின்பேரில், பரங்கிப்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...