/

கல்லுாரியில் சமத்துவ பொங்கல் விழா

காட்டுமன்னாா்கோவில் எம்ஆா்கே பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழா

News image
Updated On :14 ஜனவரி 2026, 7:23 pm

Syndication

கடலூா் மாவட்டம் காட்டுமன்னாா்கோவிலில் உள்ள எம்.ஆா்.கே இன்ஸ்டிட்டியூட் ஆப் டெக்னாலஜி கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா கல்லூரி வளாகத்தில் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.

கல்லூரி தலைவா் எம்ஆா்கேபி.கதிரவன் தலைமை வகித்து பொங்கல் விழாவை தொடங்கி வைத்தாா். பொறியியல் கல்லூரி முதல்வா் கோ.ஆனந்தவேலு, நிா்வாக அதிகாரி இ..கோகுலகண்ணன், மேலாளா் கே.விஸ்வநாத், மற்றும் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வா் ஆா்.வெங்கடேசன், துனைமுதல்வா் எஸ்.அறிவழகன், மற்றும் பேராசிரியா்கள், அலுவலா்கள், மாணவ மாணவியா்கள் கலந்து கொண்டு சமத்துவ பொங்கலிட்டு கொண்டாடினா்.