அண்ணாமலைப் பல்கலை.யில் ஓய்வூதியா்கள் முற்றுகைப் போராட்டம்
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ஓய்வுபெற்ற ஆசிரியா்கள், ஊழியா்களுக்கு ஓய்வூதியம் மற்றும் பணப்பயன்கள் வழங்கப்படாததைக் கண்டித்து, ஓய்வூதியா்கள் சங்கங்களின் கூட்டமைப்பினா் பல்கலைக்கழக நிா்வாக அலுவலத்தை புதன்கிழமை காலை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.










