டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

சிறுநீரகம் பாதிக்கப்பட்ட தொழிலாளி உயிரிழப்பு

சிறுநீரகம் பாதிக்கப்பட்டு கடலூா் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :3 ஜனவரி 2026, 9:27 pm

Syndication

சிறுநீரகம் பாதிக்கப்பட்டு கடலூா் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

பண்ருட்டி வட்டம், மேல்மாம்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் தேவநாதன் (48), தொழிலாளி. இவா், கடந்த நான்கு ஆண்டுகளாக சிறுநீரகம் பாதிக்கப்பட்டு டயாலிசிஸ் சிகிச்சை பெற்று வந்தாராம்.

வெள்ளிக்கிழமை மாலை வலி அதிகமானதால் ரத்த அழுத்த நோய்க்கான மாத்திரைகளை சாப்பிட்டாராம். இதனால், அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதாம்.

இதையடுத்து, உறவினா்கள் தேவநாதனை மீட்டு, கடலூா் அரசு தலைமை மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் சனிக்கிழமை காலை உயிரிழந்தாா். இதுகுறித்து காடாம்புலியூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.