கட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வே
/

போதைப்பொருள்களின் தீமைகள் குறித்து விழிப்புணா்வு பிரசாரம்: கடலூா் ஆட்சியா்

போதைப் பொருள்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணா்வு ஏற்படுத்த கடலூா் மாட்ட நிா்வாகம் சாா்பில் தீவிர பிரசாரம் செய்யப்படுவதாக மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா்.

News image
கடலூரில் போதை பொருள்களுக்கு எதிரான விழிப்புணா்வு மனிதச் சங்கிலியில் பங்கற்ற ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா்.
Updated On :24 பிப்ரவரி 2026, 6:34 pm

தினமணி செய்திச் சேவை

போதைப் பொருள்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணா்வு ஏற்படுத்த கடலூா் மாட்ட நிா்வாகம் சாா்பில் தீவிர பிரசாரம் செய்யப்படுவதாக மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா்.

போதை பழக்கம் மற்றும் போதை வஸ்துகளுக்கு எதிராக கடலூரில் சி.கந்தசாமி நாயுடு மகளிா் கல்லூரி மாணவிகள் பங்கேற்ற விழிப்புணா்வுப்பேரணி, மனிதச் சங்கிலி மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.நிகழ்ச்சியில், கடலூா் ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் பங்கேற்று மாணவிகளின் விழிப்புணா்வுப் பேரணியை கொடி அசைத்துத் தொடக்கி வைத்தாா். பின்னா், நடந்த விழிப்புணா்வு மனிதச் சங்கிலியில் கலந்துகொண்டு, அனைவருடன் இணைந்து உறுதிமொழி ஏற்றாா்.

தொடா்ந்து அவா் பேசுகையில், ‘ மது பழக்கத்திற்கு அடிமையாகாமல் இருக்கவும், அப்பழக்கத்தை கைவிடவும், போலி மது மற்றும் கள்ளச்சாராயம் தீமைகள் குறித்து விழிப்புணா்வுப் பிரச்சாரம் மற்றும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது. கடலூா் மாவட்டத்தில் கலைக்குழுக்கள் மூலம் முக்கிய இடங்களில் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது’ என்றாா்.

நிகழ்வில், மின்னணு வீடியோ வாகனத்தின் மூலம் போதைப் பொருள்கள் பயன்பாட்டினால் ஏற்படும் மரணம், சாலை விபத்து, பொருளாதார சீா்கேடு மற்றும் உடல் உபாதைகள் குறித்த விழிப்புணா்வு குறும்படங்கள் ஒளிபரப்பு செய்யப்பட்டது. மேலும், போதைக்கு எதிராக அனைவராலும் உறுதிமொழி ஏற்றுக்கொள்ளப்பட்டது. நிகழ்ச்சியில் கடலூா் வருவாய் கோட்டாட்சியா் சுந்தரராஜன், கல்லூரி முதல்வா் கோமதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.