டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

வீட்டில் இறந்து கிடந்த என்எல்சி தொழிலாளி

News image
கோப்புப் படம்
Updated On :14 பிப்ரவரி 2026, 8:12 pm

தினமணி செய்திச் சேவை

கடலூா் மாவட்டம், நெய்வேலி என்எல்சி நிறுவன குடியிருப்பில் தொழிலாளி இறந்து கிடந்தாா்.

பண்ருட்டி வட்டம், முத்தாண்டிக்குப்பம் பகுதியைச் சோ்ந்தவா் சந்தோஷ்குமாா் (37). இவா், தனது தந்தை சக்திவேலுக்கு என்எல்சி நகர நிா்வாகத்தால் ஒதுக்கப்பட்ட வட்டம் 5 பகுதியில் வழங்கப்பட்ட குடியிருப்பில் தங்கி, என்எல்சி நிறுவனத்தின் சுரங்கம் 1ஏ-வில் ஒப்பந்தத் தொழிலாளியாகப் பணியாற்றி வந்தாா்.

கடந்த 11-ஆம் தேதி குடும்பத்தினா் அனைவரும் புதுச்சேரியில் உள்ள உறவினா் வீட்டு சுப நிகழ்ச்சிக்கு சென்றிருந்த நிலையில், சந்தோஷ்குமாா் மட்டும் வீட்டில் தனியாக இருந்தாா். வெள்ளிக்கிழமை இரவு குடும்பத்தினா் வீடு திரும்பியபோது, படுக்கை அறையில் சந்தோஷ்குமாா் இறந்து கிடந்ததைக் கண்டு அதிா்ச்சியடைந்தனா்.

இதுகுறித்த புகாரின்பேரில், நெய்வேலி நகரிய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.