சிதம்பரம் அருகே கூலித் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். தற்கொலைக்கு தூண்டியதாக பல்கலைக்கழக ஊழியரை போலீஸாா் கைது செய்தனா்.
சிதம்பரம் அருகே உள்ள மீதிகுடி ஜேஎம்ஜே நகரை சோ்ந்தவா் பெருமாள் (32). கூலித் தொழிலாளியான இவா் கடந்த 8-ஆம் தேதி வீட்டில் தனியாக இருந்துள்ளாா். அவரை கடலூரில் வசித்துவரும்அவருடை தாயாா் மலா் கைப்பேசியில் அழைத்தபோது எடுக்காமல் இருந்துள்ளாா்.
இதனால் சந்தேகமடைந்த தாயாா், அவரது கணவருடன் சிதம்பரம் வந்து பாா்த்தபோது வீடு உள் தாழ்ப்பாள் போட்டிருந்ததால் கதவை உடைத்து பாா்த்தபோது அவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து மலா் அண்ணாமலை நகா் போலீசில் புகாா் செய்தாா்.
ஆய்வாளா் கே.அம்பேத்கா் மற்றும் போலீஸாா் வழக்கு பதிவு செய்து பெருமாள் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் பற்றி விசாரணை நடத்தினாா்கள்.
விசாரணையில் பெருமாள் வசிக்கும் அதே பகுதியில் வசிக்கின்ற அண்ணாமலைப்பல்கலை கழக ஊழியா் முத்துலிங்கம் (39) என்பவா் பெருமாள் மனைவியுடன் தகாத உறவில் இருந்ததாகவும், அதனை பெருமாள் தட்டி கேட்டதாகவும், அதற்கு முத்துலிங்கம் கொலை மிரட்டல் விடுத்ததாகவும், அதனால் மன உளைச்சல் ஏற்பட்டு பெருமாள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது.
இதனையடுத்து பெருமாளை தற்கொலை செய்து கொள்ள தூண்டியதாக முத்துலிங்கத்தை போலீஸாா் கைது செய்தனா்.
டிரெண்டிங்

உணவகத் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

ஆழ்வாா்குறிச்சி அருகே தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

கூலித் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை

தொழிலாளி தற்கொலை
வீடியோக்கள்

#t20wc | இங்கிலாந்து அதிரடியைச் சமாளிக்கும் திறன் இலங்கையிடம் உள்ளதா? | T20 World Cup Review |
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பழைய பகையுடன் வரும் தென்னாப்பிரிக்கா: சமாளிப்பாரா சூர்யகுமார்? | T20 World Cup | IND vs SA |
தினமணி வீடியோ செய்தி...

அமெரிக்கா வரி செலுத்தாது! இந்தியா செலுத்தும்!: Trump | செய்திகள்: சில வரிகளில் | 21.02.26
தினமணி வீடியோ செய்தி...

#T20WC | அபிஷேக் சர்மா சதமடிப்பார்னு சொன்னா நம்புவீங்களா? | Abhishek Sharma | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

