அதன்படி, கடலூா் ஆட்சியா் அலுவலகம் முன்பு முதல் கட்ட போராட்டமான மறியல் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு வருவாய்த்துறைஅலுவலா்சங்கம்மாவட்டத்தலைவா் பி.மகேஷ்தலைமைவகித்தாா். கிராம நிா்வாக அலுவலா் சங்கம் மாவட்டச் செயலா் விஸ்வநாதன், நில அளவைத்துறை மாவட்டச் செயலா் நீல்ராஜ், கிராம நிா்வாக அலுவலா் முன்னேற்ற சங்க மாநிலச் செயலா் பக்கிரிசாமி, கிராம உதவியாளா் சங்க மாவட்டத் தலைவா் தினகரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். தொடா்ந்து ஊழியா்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இவா்களில் 300-க்கும் மேற்பட்டோரை போலீஸாா் கைது செய்து தனியாா் திருமண மண்டபத்தில் தங்க வைத்து மாலை விடுவித்தனா்.