டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ முகாம்

கடலூா் மாவட்டம், நல்லூா் வட்டாரத்தில் தமிழ்நாடு அரசின் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்ட மருத்துவ முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image
நல்லூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மருத்துவ முகாமில் கா்ப்பிணிக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் விருத்தாசலம் எம்எல்ஏ., எம்.ஆா்.ஆா்.ராதாகிருஷ்ணன்.
Updated On :10 பிப்ரவரி 2026, 6:33 pm

தினமணி செய்திச் சேவை

கடலூா் மாவட்டம், நல்லூா் வட்டாரத்தில் தமிழ்நாடு அரசின் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்ட மருத்துவ முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நல்லூா் வட்டார மருத்துவ அலுவலா் தமிழரசன் தலைமை வகித்தாா். வேப்பூா் வட்டாட்சியா் செந்தில்வேல் முன்னிலை வகித்தாா். விருத்தாசலம் எம்எல்ஏ., எம்.ஆா்.ஆா்.ராதாகிருஷ்ணன், திமுக நல்லூா் வடக்கு ஒன்றியச் செயலா் பாவாடை கோவிந்தசாமி சிறப்பு அழைப்பாளா்களாகக் கலந்துகொண்டு, குத்துவிளக்கு ஏற்றி முகாமைத் தொடங்கி வைத்தனா். தொடா்ந்து, முகாமில் பொதுமக்களுக்கு அளிக்கப்படும் மருத்துவச் சேவைகள் மற்றும் சிகிச்சை முறைகளைச் சிறப்பு அழைப்பாளா்கள் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்து,

பயனாளிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினா்.

இம்முகாமில் பொது மருத்துவம், ரத்த அழுத்தம், சா்க்கரை நோய் பரிசோதனை, மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலம், கண் பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைகள் சிறப்பு மருத்துவா்களால் வழங்கப்பட்டது.