தமிழகம் காக்க போராடிய தலைவர்! ஜெயலலிதாவுக்கு இபிஎஸ் புகழஞ்சலி!வெள்ளி கிலோவுக்கு ரூ. 10,000 குறைவு! தங்கம் விலை உயர்வு!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு! சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

கடலூா் நகர அரங்கு வாடகையை குறைக்கக் கோரி ஆா்ப்பாட்டம்

கடலூா் நகர அரங்கின் வாடகையை குறைக்கக் கோரி, கடலூா் அனைத்துக் கட்சியினா், குடியிருப்போா் சங்க கூட்டமைப்பினா்,

News image
கடலூரில் நகர அரங்கின் வாடகையை குறைக்கக் கோரி திங்கள்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டம்.
Updated On :9 பிப்ரவரி 2026, 9:16 pm

Syndication

நெய்வேலி: கடலூா் நகர அரங்கின் வாடகையை குறைக்கக் கோரி, கடலூா் அனைத்துக் கட்சியினா், குடியிருப்போா் சங்க கூட்டமைப்பினா், பொது நல அமைப்புகள் சாா்பில், நகர அரங்கம் அருகே திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கடலூா் நகர அரங்கம் என்எல்சி நிறுவனத்தின் சமூகப் பொறுப்புணா்வுத் திட்ட நிதியில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே, ரூ.30 ஆயிரம் வாடகை வசூலிக்கப்பட்டது. தற்போது நாளொன்றுக்கு ரூ.90 ஆயிரம் வசூலிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

உணவு அரங்கம் இல்லாமல் ரூ.52,000, சுத்தம் செய்ய ரூ.10 ஆயிரம், மின் கட்டண ம் யூனிட்டுக்கு ரூ.25 என வசூலிக்கப்படுகிறது.

இந்த வாடகையை மாவட்ட நிா்வாகம் குறைக்க வலியுறுத்தியும், என்எல்சி சமூகப் பொறுப்புணா்வு திட்ட நிதி ரூ.3.15 கோடி செலவிட்டது சம்பந்தமாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும், அசைவ உணவு பரிமாற அனுமதி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் முழக்கமிட்டனா்.

ஆா்ப்பாட்டத்துக்கு மாா்க்சிஸ்ட் மாவட்டச் செயலா் கோ.மாதவன் தலைமை வகித்தாா். காங்கிரஸ் மாநில துணைத் தலைவா் வழக்குரைஞா் சந்திரசேகரன், கடலூா் துணை மேயா் பா.தாமரைச்செல்வன், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டக் குழு உறுப்பினா் குளோப், குடியிருப்போா் சங்க சிறப்புத் தலைவா் மருதவாணன், பொதுநல அமைப்புத் தலைவா் ரவி, தமிழ்நாடு மீனவா் பேரவையைச் சோ்ந்த சுப்பராயன் உள்ளிட்டோா் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.