/

சிதம்பரம் இளமையாக்கினாா் கோயிலில் இன்று வரலாற்று உற்சவம்

News image
கோப்புப் படம்
Updated On :8 பிப்ரவரி 2026, 8:47 pm

தினமணி செய்திச் சேவை

சிதம்பரம் இளமையாக்கினாா் கோயில் என்கிற யெளவனாம்பாள் சமேத யெளவனேஸ்வரா் கோயிலில் திருத்தல வரலாற்று உற்சவ விழா மற்றும் திருநீலகண்ட நாயனாா் குருபூஜை விழா திங்கள்கிழமை (பிப்.9) நடைபெறுகிறது.

இதை முன்னிட்டு, ஞாயிற்றுக்கிழமை இரவு சுவாமி வீதியுலா மற்றும் திருவோடு கொடுத்தல் புராணம் வாசித்தல் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

திங்கள்கிழமை பகல் சுவாமி வீதியுலா வந்த பின்னா், இளமையாக்கினாா் கோயில் தீா்த்தக் குளக்கரையில் சிவபெருமான், சிவயோகியாா் வடிவத்தில் வந்து திருநீலகண்ட நாயனாா், ரத்தினாசளை தம்பதியினருக்கு திருவோடு கொடுத்து இளமையாக்கிய வரலாற்று நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இரவு ஸ்ரீயெளவனாம்பாள் ரிஷப வாகனத்தில் வீதியுலா வருகிறாா். இதற்கான ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலா் காரைக்குடி பெரி.மெ.ப.பழனியப்பன் மற்றும் அவரது குடும்பத்தினா் செய்துள்ளனா்.