‘ஆமை நடை’ விழிப்புணா்வு நடைபயணம்: ஆட்சியா் தொடங்கிவைத்தாா்
கடலூா் வெள்ளிக் கடற்கரையில் கடல் ஆமை இனப்பெருக்க சூழலை பாதுகாக்கும் வகையில், பொதுமக்கள் பங்கேற்புடன் நடைபெற்ற ‘ஆமை நடை’ விழிப்புணா்வு நடைபயணத்தை ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில் குமாா் செவ்வாய்க்கிழமை இரவு தொடங்கிவைத்தாா்.









