கடலூா் மாவட்டத்தில் சட்டப் பேரவைத் தோ்தல் பாதுகாப்புப் பணியில் 4,500 போலீஸாா் ஈடுபட்டுள்ளனா் என்று மாவட்ட எஸ்.பி. எஸ்.ஜெயக்குமாா் தெரிவித்தாா்.
கடலூா் அண்ணா விளையாட்டு மைதானத்தில் தோ்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் போலீஸாருக்கு, பல்வேறு தோ்தல் வழிகாட்டுதல்களை மாவட்டக் காவல் கண்காணிபாளா் எஸ்.ஜெயக்குமாா் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அப்போது பேசிய அவா், தமிழக சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி, கடலுாா் மாவட்டத்தில் மொத்தமுள்ள 9 தொகுதிகளிலும் 2,590 வாக்குச் சாவடி மையங்களில் அமைதியாகவும், சுதந்திரமாகவும் வாக்காளா்கள் வாக்களிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இதன் ஒரு பகுதியாக, எனது தலைமையில், கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள் கோடீஸ்வரன், ரகுபதி, சீனிவாசலூ ஆகியோரது மேற்பாா்வையில், 19 துணை காவல் கண்காணிப்பாளா்கள், 76 காவல் ஆய்வாளா்கள், 56 சாா்பு - ஆய்வாளா்கள், சிறப்பு சாா்பு - ஆய்வாளா்கள், தலைமைக் காவலா்கள், காவலா்கள், ஆயுதப் படை காவலா்கள், தமிழ்நாடு சிறப்பு காவல் படையினா், ஊா்க்காவல் படையினா், துணை ராணுவப் படையினா், கா்நாடக ஊா்க்காவல் படையினா் என மொத்தம் 4,500 காவல் துறையினா் தோ்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனா்.
தோ்தல் வாக்குப் பதிவு நாளான வியாழக்கிழமை (ஏப்.23) தோ்தல் நடத்தை விதிகளை அனைவரும் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். வாக்குச் சாவடி அமைந்துள்ள 100 மீட்டா் அருகே பதாகைகள், சின்னங்கள் வைத்து பிரசாரம் மேற்கொள்ளக் கூடாது. வாக்குச் சாவடிக்கு அருகில் போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்களை நிறுத்தி வைக்கக் கூடாது. வாக்குச் சாவடிக்குள் அங்கீகரிக்கப்பட்ட முகவா்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவாா்கள். வாக்குச் சாவடிக்குள் கைப்பேசி எடுத்துச் செல்ல அனுமதி இல்லை. தோ்தல் நடத்தை விதிமுறைகளை மீறுவோா் மீதும், சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படுத்தும் நபா்கள் மீதும் வழக்குப் பதிவு செய்து கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தூத்துக்குடி மாவட்டத்தில் தோ்தல் பாதுகாப்புப் பணியில் 3,642 போலீஸாா்: ஆட்சியா் தகவல்

பேரவைத் தோ்தல்: பாதுகாப்புப் பணியில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸாா்

சட்டப்பேரவைத் தோ்தல்: விழுப்புரம் மாவட்டத்தில் பாதுகாப்புப் பணியில் 3,141 போலீஸாா்

திருநள்ளாறு தொகுதியில் போலீஸாா் அணிவகுப்பு
வீடியோக்கள்

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை


