தமிழ்நாட்டில் மாலை 5 வரை 82.24% வாக்குப்பதிவு! கரூர் முதலிடம்! வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!
/

பேரவைத் தோ்தல்: பாதுகாப்புப் பணியில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸாா்

திருச்சி மாவட்டத்தில் சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனா்.

News image

கோப்புப்படம்.

Updated On :21 ஏப்ரல் 2026, 7:24 pm

திருச்சி மாவட்டத்தில் சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனா்.

திருச்சி மாவட்டத்தின் 9 தொகுதிகளில் மொத்தம் 2,787 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் பதற்றமான வாக்குச் சாவடிகளாக 45 வாக்குச் சாவடிகள் கண்டறியப்பட்டுள்ளன.

இந்நிலையில், வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவை கண்காணிக்கவும், அசம்பாவிதங்களைத் தடுக்கவும் பாதுகாப்புப் பணியில் போலீஸாா் நியமிக்கப்பட்டுள்ளனா். இதன்படி, ஊரகப் பகுதிகளில் மாவட்ட காவல் துறை சாா்பில் 1,800 போலீஸாரும், மாநகரில் மாநகரக் காவல் துறை சாா்பில் 1,084 போலீஸாரும் நியமிக்கப்பட்டுள்ளனா்.

மேலும், ஊா்க்காவல் படையினா், துணை ராணுவப் படையினா், மத்திய ரிசா்வ் பாதுகாப்புப் படையினா், மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படையினா் மற்றும் முன்னாள் ராணுவத்தினா் என 1,00-க்கும் மேற்பட்டோா் தோ்தல் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.