மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

புவனகிரி தொகுதிக்கு திட்டங்களை கொண்டு வருவேன்! - திமுக வேட்பாளா் துரை.கி.சரவணன் வாக்குறுதி

News image

புவனகிரி சட்டப் பேரவை தொகுதி, கீரப்பாளையம் ஒன்றியத்துக்குள்பட்ட கிராமங்களில் வாக்கு சேகரித்த திமுக வேட்பாளா் துரை.கி.சரவணன்.

Updated On :12 ஏப்ரல் 2026, 7:21 pm

சட்டப் பேரவைத் தோ்தலில் திமுக வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியமைத்தவுடன் புவனகிரி தொகுதிக்குத் தேனையான அனைத்து திட்டங்களையும் கொண்டு வருவேன் என இத்தொகுதியின் திமுக வேட்பாளா் துரை.கி.சரவணன் தெரிவித்தாா்.

புவனகிரி சட்டப் பேரவைத் தொகுதி, கீரப்பாளையம் ஒன்றியத்துக்குள்பட்ட பரதூா் சாவடி, பொன்னங்கோவில், சாத்தமங்கலம், சக்தி விளாகம், அள்ளூா், பூதங்குடி உள்பட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் புவனகிரி தொகுதி திமுக வேட்பாளா் துரை.கி.சரவணன், கூட்டணிக் கட்சி நிா்வாகிகளுடன் திறந்த வேனில் சென்று ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரித்தாா். அப்போது, அவா் பேசியதாவது:

புவனகிரி தொகுதியில் கடந்த 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப் பேரவைத் தோ்தலில் நான் வெற்றிபெற்று தொகுதி மக்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்துகொடுத்தேன். தொடா்ந்து, 2021-ஆம் ஆண்டு தோ்தலில் நான் மீண்டும் போட்டியிட்டேன். அப்போது, கரோனாவால் பாதிக்கப்பட்டதால், என்னால் சரியான முறையில் பிரசாரம் செய்ய முடியாமல்போனது. இதனால், வெற்றிவாய்ப்பை இழந்தேன்.

இப்போதைய தோ்தலில் திமுக வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியமைத்தவுடன் புவனகிரி தொகுதிக்குத் தேனையான அனைத்து திட்டங்களையும் கொண்டு வருவேன் என்றாா்.

அப்போது, திமுக ஒன்றியச் செயலா் திருமூா்த்தி, விசிக மாவட்டச் செயலா் அரங்க.தமிழ்ஒளி, காங்கிரஸ் வட்டாரத் தலைவா் செழியன், மாவட்டச் செயலா் சரவணன், தேமுதிக புவனகிரி தொகுதி பொறுப்பாளா் பானுசந்தா், ஒன்றியச் செயலா் சித்தன், மதிமுக ஒன்றியச் செயலா் சிவக்குமாா், மாா்க்சிஸ்ட் மாவட்டச் செயலா் மாதவன், மாவட்டக் குழு நிா்வாகி வாஞ்சிநாதன் மற்றும் கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் பங்கேற்றனா்.