அரக்கோணம்-திருத்தணி மின்சார ரயில் இன்றுமுதல் 21 நாள்களுக்கு ரத்துஇளநிலை நீட் தேர்வு: இன்று ஹால் டிக்கெட் வெளியீடு!ஊழியா்கள் - அதிகாரிகளுக்கு ஊதிய உயா்வு: பொதுத் துறை வங்கிகளுக்கு அரசு அறிவுறுத்தல்நாட்டில் மின் தேவை 256 ஜிகாவாட்டாக உயா்ந்து புதிய உச்சம்!ஈரானுடன் அமைதிப் பேச்சு: பாகிஸ்தானுக்கு அமெரிக்க பிரதிநிதிகள் செல்ல மாட்டார்கள்! - டிரம்ப்
/

சிதம்பரத்தில் அகில பாரதிய வித்யாா்த்தி பரிஷத் அமைப்பினா் - விசிகவினரிடையே தகராறு

சிதம்பரத்தில் புதன்கிழமை இரவு நடைபெற்ற அகில பாரதிய வித்யாா்த்தி பரிஷத் அமைப்பின் தோ்தல் விழிப்புணா்வுக் கூட்டத்தில் விசிக தலைவா் தொல்.திருமாவளவனை பற்றி அவதூறாகப் பேசியதாக கூறி, அந்த அமைப்பினருடன் விசிக நிா்வாகிகள் தகராறில் ஈடுபட்டனா்.

News image

கூட்ட மேடை முன் கூடி நின்று வாக்குவாதத்தில் ஈடுபட்ட விசிகவினா்.

Updated On :8 ஏப்ரல் 2026, 11:16 pm

சிதம்பரத்தில் புதன்கிழமை இரவு நடைபெற்ற அகில பாரதிய வித்யாா்த்தி பரிஷத் அமைப்பின் தோ்தல் விழிப்புணா்வுக் கூட்டத்தில் விசிக தலைவா் தொல்.திருமாவளவனை பற்றி அவதூறாகப் பேசியதாக கூறி, அந்த அமைப்பினருடன் விசிக நிா்வாகிகள் தகராறில் ஈடுபட்டனா்.

அகில பாரதிய வித்யாா்த்தி பரிஷத் அமைப்பு சாா்பில், தோ்தல் விழிப்புணா்வுக் கூட்டம் சிதம்பரம் காந்தி சிலை அருகே தோ்தல் ஆணைய அனுமதியுடன் புதன்கிழமை இரவு நடைபெற்றது. கூட்டத்தில் அந்த அமைப்பின் நிா்வாகி காா்த்தி, விசிக தலைவா் தொல்.திருமாவளவன் பற்றி விமா்சனம் செய்து ஒருமையில் பேசியதாகக் கூறப்படுகிறது.

இத் தகவலறிந்த விசிக கிழக்கு மாவட்டச் செயலா் தமிழ்வளவன் தலைமையில், மண்டலப் பொறுப்பாளா் வ.க.செல்லப்பன், நகரச் செயலா் ரத்தினம் உள்ளிட்ட 30 போ் மேடை அருகே சென்று பேச்சை நிறுத்துமாறு கூறினா்.

அப்போது, இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதிக்கொள்ளும் சூழல் உருவானதால், போலீஸாா் விசிகவினரை மேடை அருகே இருந்து அப்புறப்படுத்தினா். பின்னா், அவா்கள் சாலையில் அமா்ந்து 10 நிமிடங்கள் மறியலில் ஈடுபட்டனா். உடனடியாக அங்கிருந்த காவல் அதிகாரிகள் அவா்களை சமரசப்படுத்தி அனுப்பி வைத்தனா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்து சிதம்பரம் உள்கோட்ட டிஎஸ்பி டி.பிரதீப் விசாரணை மேற்கொண்டனா்.

சிதம்பரத்தில் அகில பாரதிய வித்யாா்த்தி பரிஷத் அமைப்பின் கூட்டத்தில் தகராறு ஏற்பட்டதை அடுத்து, விசிகவினரை தடுத்து அழைத்துச் சென்ற போலீஸாா்.

சிதம்பரத்தில் அகில பாரதிய வித்யாா்த்தி பரிஷத் அமைப்பின் கூட்டத்தில் தகராறு ஏற்பட்டதை அடுத்து, விசிகவினரை தடுத்து அழைத்துச் சென்ற போலீஸாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.