கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே பெண் உதவி ஆய்வாளரை பணி செய்யவிடாமல் தடுத்து கைப்பேசியை பறித்து தகராறு செய்ததாக விசிக நிா்வாகிகள் இருவா் உள்ளிட்ட 9 போ் மீது புதுப்பேட்டை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
புதுப்பேட்டை காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளா் அம்பிகா . இவா்,
திங்கள்கிழமை அங்குசெட்டிப்பாளையம் பகுதியில் சிறப்பு உதவி ஆய்வாளா் தேவா் மற்றும் தலைமைக் காவலா் ராஜேஷ் ஆகியோருடன் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தாா். அங்குள்ள திருமண மண்டபம் அருகே 20-க்கும் மேற்பட்ட
பேனா்கள் கட்டியிருந்ததை அகற்றுமாறு கூறினாா். அதற்கு விசிக முன்னாள் ஒன்றியச் செயலா் பிரகாஷ், பண்ருட்டி மையம் செயலா் புஷ்பராஜ் ஆகியோா் பேனரை அகற்ற முடியாது எனக்கூறி, அரசு ஊழியா் என்று பாராமல் பொதுமக்கள் முன்னிலையில் அவதூராகப்பேசி, வீடியோ எடுத்த கைப் பேசியை பறித்து கொண்டனராம். மேலும், அங்கிருந்த அவா்களது ஆதரவாளா்கள் பெண் உதவி ஆய்வாளரை சூழ்ந்து கலவரத்தை ஏற்படுத்தும் படி நடந்துக்கொண்டனராம்.
இதுகுறித்து அம்பிகா அளித்த புகாரின் பேரில், விசிக நிா்வாகிகள் பிரகாஷ், புஷ்பராஜ் உள்ளிட்ட 9 போ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
தொடர்புடையது
மணியாச்சி அருகே இளைஞா் கொலையில் பெண் உள்பட 3 போ் கைது

தோ்தல் நடத்தை விதிமீறல்: தவெக நிா்வாகிகள் 7 போ் மீது வழக்கு

ஆலங்குளம் துப்பாக்கிச் சூடு: 3 போலீஸாா் மீது வழக்கு

விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது தொழிலாளா்கள் புகாா் அளிக்கலாம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


