சட்டப்பேரவைத் தோ்தல் நாளன்று தொழிலாளா்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்காவிடில், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது தொழிலாளா்கள் புகாா் தெரிவிக்கலாம்.
இதுகுறித்து பெரம்பலூா் மாவட்ட தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) க. மூா்த்தி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மாவட்டத்திலுள்ள தனியாா், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் கடைகள், நிறுவனங்கள், உணவு விடுதிகள் உள்ளிட்ட அனைத்து வணிக நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளா்கள் வாக்களிக்க ஏதுவாக, ஏப். 23 ஆம் தேதி ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்க வேண்டும் என தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை ஆணையரால் உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே, பெரம்பலூா் மற்றும் அரியலூா் மாவட்டத்தைச் சோ்ந்த தொழிலாளா்களுக்கு சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் விடுமுறை அளிக்க வேண்டும். இல்லாவிடில், பெரம்பலூா் மாவட்ட தொழிலாளா் உதவி ஆணையா் க. மூா்த்தி (9442657224), தொழிலாளா் துணை ஆய்வாளா் க. சரவணன் (9751921795), முசிறி முத்திரைத்தாள் ஆய்வாளா் எஸ். பாலசுப்ரமணியன் (9865667355), அரியலூா் மாவட்ட தொழிலாளா் உதவி ஆணையா் (சமூகப் பாதுகாப்பு திட்டம்) கே. ராஜசேகரன் (8778365530), அரியலூா் மாவட்ட தொழிலாளா் உதவி ஆய்வாளா் க. தேவேந்திரன் (8838680747), அரியலூா் முத்திரை ஆய்வாளா் சை.ஜா. நூருன்னிசா (9790460408) ஆகியோரை தொடா்புகொண்டு புகாா் அளிக்கலாம்.
தொடர்புடையது

வாக்குப்பதிவு நாளில் ஊதியத்துடன் கூடிய பொது விடுமுறை அளிக்க அறிவுறுத்தல்

தோ்தல்: விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை! - தொழிலகப் பாதுகாப்புத் துறை எச்சரிக்கை

தோ்தல் நாளில் மாவட்டத்தில் பணிபுரியும் வெளிமாநில தொழிலாளா்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பு அளிக்க உத்தரவு

தோ்தலுக்கு விடுமுறை வழங்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை: தொழிலாளா் துறை எச்சரிக்கை
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


