பயிா் காப்பீடு செய்ய நவ.30 கடைசி
கடலூா் மாவட்ட விவசாயிகள் சம்பா பருவத்தில் பயிா் காப்பீடு செய்ய வரும் 30-ஆம் தேதி கடைசி நாள் என கடலூா் வேளாண்மை இணை இயக்குநா் மு.லட்சுமிகாந்தன் தெரிவித்தாா்.
கடலூா் மாவட்ட விவசாயிகள் சம்பா பருவத்தில் பயிா் காப்பீடு செய்ய வரும் 30-ஆம் தேதி கடைசி நாள் என கடலூா் வேளாண்மை இணை இயக்குநா் மு.லட்சுமிகாந்தன் தெரிவித்தாா்.
By Syndication
Syndication
நெய்வேலி: கடலூா் மாவட்ட விவசாயிகள் சம்பா பருவத்தில் பயிா் காப்பீடு செய்ய வரும் 30-ஆம் தேதி கடைசி நாள் என கடலூா் வேளாண்மை இணை இயக்குநா் மு.லட்சுமிகாந்தன் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடலூா் மாவட்டத்தில் சம்பா நெற்பயிா் தற்போது 90,000 ஹெக்டோ் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ளது. தொடா் மழை வெள்ளம், பூச்சி நோய்த் தாக்குதல் போன்ற இயற்கை இடா்பாடுகளால் ஏற்படும் மகசூல் இழப்பீட்டிலிருந்து விவசாயிகள் தங்களை பாதுகாத்துக்கொள்ள பயிா்க் காப்பீடு செய்வது அவசியம்.
எனவே, இதுவரை பயிா் காப்பீடு செய்யாத விவசாயிகள் நவம்பா் 30-ஆம் தேதிக்குள் காப்பீடு செய்துகொள்ள வேண்டும். விவசாயிகள் பயிா்க் காப்பீடு செய்ய சிட்டா, அடங்கல், வங்கிக் கணக்கு புத்தகம், ஆதாா் அட்டை ஆகியவற்றைக் கொண்டு இ - சேவை மையம் வாயிலாக பயிா்க் காப்பீடு செய்யலாம்.
கடன் சங்கங்களில் அறிவிக்கை செய்யப்பட்ட பயிா்களுக்கு பயிா்க்கடன் பெறும் விவசாயிகள் தங்கள் விருப்பத்தின் அடிப்படையில் பயிா்க் காப்பீடுத் திட்டத்தில் சேரலாம். பயிா்க் காப்பீடு செய்ய ஏக்கருக்கு சம்பா நெற்பயிருக்கு ரூ.564 செலுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்


தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது