எத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

ஹோட்டல் உரிமையாளரிடம் நகைகள் திருட்டு

ஹோட்டல் உரிமையாளரிடம் ரூ.1 லட்சம் மதிப்புள்ள நகைகளை திருடியவர்களை போலீஸார் தேடி வருகின்றனர். 

News image
Updated On :3 ஜனவரி 2024, 12:04 pm

VASUDEVAN.K

ஹோட்டல் உரிமையாளரிடம் ரூ.1 லட்சம் மதிப்புள்ள நகைகளை திருடியவர்களை போலீஸார் தேடி வருகின்றனர். 

 தஞ்சை மாவட்டம் பாபநாசத்தை சேர்ந்தவர் சுரேஷ்குமார்(31). ஹோட்டல் உரிமையாளர். கடலூர் முதுநகரில் உள்ள உறவினர் வீட்டுக்கு மனைவி மற்றும் குழந்தையோடு வந்திருந்தார். இந்நிலையில் புதன்கிழமை மாலை புதுச்சேரி சென்றுவிட்டு தனியார் பஸ்சில் கடலூருக்கு வந்து கொண்டிருந்தனர்.

 ஓட்டநர் சீட்டுக்கு பின்புறமுள்ள இருக்கையில் சுரேஷ்குமாரின் மனைவி கைக்குழந்தையுடன் அமர்ந்திருந்தார். அவரது இருக்கையின் கீழ் தனது பேக்கை வைத்திருந்தார். கடலூர் பஸ் நிலையத்தில் இறங்கியபோது, பேக்கின் ஜிப் திறந்த நிலையில் இருந்தது தெரியவந்தது. மேலும் அதிலிருந்த 4.19 கிராமுள்ள வைர தோடு, முக்கால் பவுன் செயின், 3 கிராம் மோதிரம் ஆகிய நகைகள் காணாமல் போயிருந்தது.

 இதுகுறித்து திருப்பாதிரிப்புலியூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து நகை திருடியவர்களை தேடிவருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.