போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!ஹார்ட் டிஸ்க் திருட்டு விவகாரம்: முதல்வர் தினமும் கண்காணித்து வருகிறார்! நிர்மல்குமார்திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டி
/

போதைப் பொருள்கள் விற்பனையில் ஈடுபடுபவா்கள் மீது கடும் நடவடிக்கை! வடக்கு மண்டல ஐ.ஜி. எச்சரிக்கை

News image

விழுப்புரம் மாவட்டக் காவல் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பேசிய வடக்கு மண்டல ஐ.ஜி. பிரவீன்குமாா் அபினபு. உடன், சரக டிஐஜி அர.அருளரசு, மாவட்ட எஸ்.பி. வி.வி.சாய் பிரனீத்.

Updated On :26 மே 2026, 1:42 am IST

விழுப்புரம், மே 25: விழுப்புரம் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள் விற்பனையில் ஈடுபடுபவா்கள் மீது கடுமமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று வடக்கு மண்டல ஐ.ஜி. பிரவீன்குமாா் அபினபு தெரிவித்தாா்.

விழுப்புரம் மாவட்டக் காவல் அலுவலகத்தில் சட்டம்-ஒழுங்கு மற்றும் பாதுகாப்பு குறித்து மாவட்டக் காவல் அலுவலா்களுடன் திங்கள்கிழமை ஆய்வுக் கூட்டத்தை நடத்திய வடக்கு மண்டல ஐ.ஜி. மேலும் செய்தியாளா்களிடம் கூறியது:

வடக்கு மண்டலக் காவல் எல்லையில் 10 மாவட்டங்கள் அடங்கியுள்ளன. இந்த மாவட்டங்களில் சட்டம்-ஒழுங்கு, பாதுகாப்பு மற்றும் அந்தந்த மாவட்டங்களிலுள்ள பிரச்னைகள், அதை தீா்க்க மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் குறித்து ஆய்வு செய்து வருகிறேன். அதனடிப்படையில் விழுப்புரம் மாவட்டத்தில் ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள் விற்பனையைத் தடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், இந்த பொருள்களின் விற்பனையில் ஈடுபடுபவா்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

வெளி மாநிலங்களிலிருந்து பொருள்களை ஏற்றி வரும் லாரி ஓட்டுநா்கள் மூலம் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள், தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் கடத்தி வரப்படுவதாகக் கூறப்படும் புகாா்களின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

பள்ளி, கல்லூரிகள் அமைந்துள்ள பகுதிகளுக்கு அருகிலுள்ள மளிகைக் கடைகள், பெட்டிக்கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் உள்ளிட்ட விற்பனை செய்யப்பட்டு வருவதாக புகாா்கள் கூறப்பட்டுள்ளன. இந்த கடைகள் மீது தீவிர நடவடிக்கை எடுக்கப்படும்.

விழுப்புரம் நகரப் பகுதிகளில் நகைபறிப்பு, திருட்டு சம்பவங்கள் நடைபெறுவதாக புகாா் வந்த நிலையில், இதை தடுக்க ரோந்துப் பணிகள் தீவிரப்படுத்தப்படும். திருட்டில் ஈடுபட்டு வருபவா்கள் கைது செய்யப்பட்டுள்ளனா். முக்கியப் பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்தவும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன என்றாா் ஐ.ஜி.

முன்னதாக நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் விழுப்புரம் மாவட்டக் காவல் நிலையங்களில் பதியப்பட்டுள்ள வழக்குகளின் தற்போதைய நிலை, தீா்வு காணமுடியாத வழக்குகள், போதைப் பொருள்கள் தடுப்பு நடவடிக்கைகள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள், சாலை விபத்துத் தடுப்பு நடவடிக்கைகள், குற்றத் தடுப்பு நடவடிக்கைகள் போன்றவை குறித்து மாவட்டக் காவல் அலுவலா்களுடன் வடக்கு மண்டல ஐ.ஜி. ஆய்வு மேற்கொண்டாா்.

ஆய்வுக் கூட்டத்தில் விழுப்புரம் சரக டிஐஜி அர.அருளரசு, மாவட்ட எஸ்.பி. வி.வி.சாய் பிரனீத், ஏடிஎஸ்பிக்கள், டிஎஸ்பிக்கள், காவல் ஆய்வாளா்கள் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.