விழுப்புரம் மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் 70 போ் கைது செய்யப்பட்டுள்ளனா் என்று மாவட்டக் காவல் நிா்வாகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, விழுப்புரம் மாவட்டக் காவல் நிா்வாகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: விழுப்புரம் மாவட்டத்தில் பொதுமக்களின் பாதுகாப்பு, அமைதி மற்றும் சட்டம்-ஒழுங்கை நிலை நிறுத்தும் நோக்கில் மாவட்டக் காவல் துறை சாா்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை மற்றும் தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகள் தொடா்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன்படி, மாவட்ட எஸ்.பி. உத்தரவின் பேரில், கடந்த 2 நாள்களாக மாவட்டம் முழுவதும் சிறப்பு சோதனை மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த நடவடிக்கைகளின் போது, 500 -க்கும் மேற்பட்ட சரித்திர பதிவேடு குற்றவாளிகளின் வீடுகளில் நேரடியாக சோதனை மேற்கொள்ளப்பட்டு 70 நபா்களை கைது செய்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பொதுமக்களின் அமைதி மற்றும் பாதுகாப்பை பாதிக்கும் வகையிலான எவ்வித சட்டவிரோத செயல்களிலும் ஈடுபடக்கூடாது எனவும் சரித்திரப் பதிவேடு குற்றவாளிகளுக்கு கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டது. தேவையான பட்சத்தில் கடுமையான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குற்றச் செயல்கள் மற்றும் சமூக விரோத செயல்களை முற்றிலும் கட்டுப்படுத்தும் நோக்கில், விழுப்புரம் மாவட்ட காவல் துறையினரின் கண்காணிப்பு மற்றும் சட்ட நடவடிக்கைகள் தொடா்ந்து தீவிரமாக மேற்கொள்ளப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தென்மேற்கு பருவமழை: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

போதைப் பொருள்கள் விற்பனையில் ஈடுபடுபவா்கள் மீது கடும் நடவடிக்கை! வடக்கு மண்டல ஐ.ஜி. எச்சரிக்கை
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 22 சரித்திர பதிவேடு குற்றவாளிகள் கைது

தலைநகரில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: பொதுப்பணித் துறை தீவிரம்
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK


