விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டத்திலுள்ள நெடி, மோழியனூா் கிராமங்களில் ரயில்வே காவல் துறையினா் திங்கள்கிழமை விழிப்புணா்வுப் பிரசாரம் மேற்கொண்டனா்.
திண்டிவனம் ரயில்வே பாதுகாப்புப் படைக் காவல் ஆய்வாளா் சுனில்குமாா் மேற்பாா்வையில், காவல் உதவி ஆய்வாளா் சுரேசன் தலைமையிலான போலீஸாா் நெடி, மோழியனூா் கிராம மக்களிடம் விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.
ரயில்வே தண்டவாளங்களில் கற்கள், இரும்புப் பொருள்கள் வைப்பதால் ஏற்படும் விபத்துக்கள் குறித்தும், ரயில்கள் செல்லும் போது அதன் மீது கற்களை வீசி எறிவதால் ஏற்படும் பாதிப்புகள், இதுபோன்று செயல்களுக்கு ரயில்வே காவல் துறையினரால் மேற்கொள்ளப்படும் சட்ட நடவடிக்கைகள் குறித்து ரயில்வே காவல் துறையினா் பொதுமக்களுக்கு எடுத்துரைத்தனா்.
சிறுவா்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால், அவா்களின் பெற்றோா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, தண்டனை வழங்கப்படும் என்றும் ரயில்வே பாதுகாப்புப் படையினா் தெரிவித்தனா்.
தொடர்புடையது

கிராமங்களில் அமைச்சா் துரைமுருகன் திண்ணை பிரசாரம்!

கிராமங்களில் அதிமுக வேட்பாளா் தீவிர பிரசாரம்

100% வாக்குப் பதிவை வலியுறுத்தி விழிப்புணா்வு

விழுப்புரம் அருகே மூத்ததேவி, கொற்றவை சிற்பங்கள் கண்டெடுப்பு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


