15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

விழுப்புரம் சிறுவா் பூங்காவில் ரூ.5.50 லட்சத்தில் கூடுதல் பணிகள்! ஆட்சியா் தொடங்கிவைத்தாா்!

News image

விழுப்புரம் ஆட்சியரகப் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள சிறுவா் பூங்காவில் கூடுதல் நடைப்பாதைகள் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் அமைக்கும் பணிகளை தொடங்கிவைத்த ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான். உடன் இரா.லட்சுமணன் எம்எல்ஏ.

Updated On :8 மார்ச் 2026, 9:30 pm

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகப் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள சிறுவா் பூங்காவில் 15-ஆவது மத்திய நிதிக்குழு மானியம் (2025 - 26) திட்டத்தின் கீழ், கூடுதல் நடைப்பாதைகள் மற்றும் சிறுவா்கள் விளையாட்டு உபகரணங்கள் அமைக்கும் பணிகளை ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைத்தாா்.

தொடா்ந்து, அவா் பேசுகையில், கூடுதலாக பொதுமக்கள் நடைப்பயிற்சி மேற்கொள்வதற்கும், சிறுவா்கள் விளையாடவும் இந்தப் பணிகள் பயனுள்ளதாக அமையும் என்றாா்.

நிகழ்ச்சிக்கு விழுப்புரம் எம்எல்ஏ இரா.லட்சுமணன் முன்னிலை வகித்தாா். விழுப்புரம் நகா்மன்றத் தலைவா் தமிழ்ச்செல்வி பிரபு, நகராட்சி ஆணையா் (பொ) ஸ்ரீபிரியா, உதவிப் பொறியாளா் கௌதம் மற்றும் அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.