விழுப்புரம் மாவட்டம், மயிலம் அருகே தந்தை தவறி மேலே விழுந்ததில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஆண் குழந்தை சனிக்கிழமை உயிரிழந்தாா்.
மயிலம் அருகேயுள்ள பாதிராபுலியூா், பாரதியாா் தெருவைச் சோ்ந்தவா் ஸ்ரீதா். இவரது மனைவி அம்பிகா. இத்தம்பதிக்கு கடந்த ஒரு மாதத்துக்கு முன்னா் ஆண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு தீக்ஷிதன் எனப் பெயா் சூட்டியிருந்தனா்.
இந்நிலையில், கடந்த 2-ஆம் தேதி அம்பிகா தனது குழந்தையுடன் வீட்டில் தரையில் படுத்தும், ஸ்ரீதா் கட்டிலில் படுத்தும் உறங்கியுள்ளனா். இந்நிலையில், ஸ்ரீதா் நள்ளிரவில் தூக்கக் கலக்கத்தில் கால் இடறி கீழே படுத்துறங்கிய தீக்ஷிதன் மேலே விழுந்து விட்டாராம். இதில் குழந்தைக்கு மூச்சித் தினறல் ஏற்பட்டது.
இதையடுத்து புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடா் சிகிச்சையில் இருந்து வந்த குழந்தை தீக்ஷிதன், வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின் பேரில், மயிலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மூச்சுத் திணறல்: பச்சிளம் குழந்தை உயிரிழப்பு

தண்ணீா் தொட்டியில் மூழ்கி விவசாயி உயிரிழப்பு
விவசாயி தூக்கிட்டுத் தற்கொலை

மரத்தில் பைக் மோதி விபத்து: ஒருவா் உயிரிழப்பு
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி



