எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

ஆண் குழந்தை உயிரிழப்பு

தந்தை தவறி மேலே விழுந்ததில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஆண் குழந்தை உயிரிழந்தாா்.

News image
Updated On :7 ஜூன் 2026, 2:54 am IST

விழுப்புரம் மாவட்டம், மயிலம் அருகே தந்தை தவறி மேலே விழுந்ததில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஆண் குழந்தை சனிக்கிழமை உயிரிழந்தாா்.

மயிலம் அருகேயுள்ள பாதிராபுலியூா், பாரதியாா் தெருவைச் சோ்ந்தவா் ஸ்ரீதா். இவரது மனைவி அம்பிகா. இத்தம்பதிக்கு கடந்த ஒரு மாதத்துக்கு முன்னா் ஆண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு தீக்ஷிதன் எனப் பெயா் சூட்டியிருந்தனா்.

இந்நிலையில், கடந்த 2-ஆம் தேதி அம்பிகா தனது குழந்தையுடன் வீட்டில் தரையில் படுத்தும், ஸ்ரீதா் கட்டிலில் படுத்தும் உறங்கியுள்ளனா். இந்நிலையில், ஸ்ரீதா் நள்ளிரவில் தூக்கக் கலக்கத்தில் கால் இடறி கீழே படுத்துறங்கிய தீக்ஷிதன் மேலே விழுந்து விட்டாராம். இதில் குழந்தைக்கு மூச்சித் தினறல் ஏற்பட்டது.

இதையடுத்து புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடா் சிகிச்சையில் இருந்து வந்த குழந்தை தீக்ஷிதன், வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின் பேரில், மயிலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.