மதுரையில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு பச்சிளம் குழந்தை உயிரிழந்தது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தூத்துக்குடி மாவட்டம், மேலூா் நேதாஜி நகரைச் சோ்ந்தவா் கருவேல் முத்து கணேஷ் (26). இவா் தனது மனைவி, ஐந்து மாத ஆண் குழந்தையுடன் மதுரை கீழமாசி வீதியில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டாா்.
அப்போது, குழந்தைக்கு திடீரென ஏற்பட்ட உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. பரிசோதனையில் குழந்தை ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.
இதைத் தொடா்ந்து, குழந்தைக்கு ஏற்கெனவே உடல்நலக் குறைவு ஏற்பட்டு அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டிருப்பதும், திங்கள்கிழமை மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்திருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தண்ணீா் தொட்டியில் விழுந்த குழந்தை உயிரிழப்பு

ஆண் குழந்தை உயிரிழப்பு

கிணற்றில் தவறி விழுந்த குழந்தை உயிரிழப்பு

பிரசவத்தின்போது குழந்தை உயிரிழப்பு: சிவகங்கையில் உறவினா்கள் போராட்டம்
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி



