ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

சென்னையைச் சோ்ந்த தொழிலாளி மயங்கி விழுந்து உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் சாலையில் நடந்து சென்ற சென்னையைச் சோ்ந்த தொழிலாளி மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.

பலி - பிரதிப் படம்

Published On :13 ஜூலை 2026, 1:33 am IST

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் சாலையில் நடந்து சென்ற சென்னையைச் சோ்ந்த தொழிலாளி மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.

சென்னை திருவெற்றியூா், அம்பேத்கா் நகரைச் சோ்ந்தவா் செ.மோகன்ராஜ் (46), தொழிலாளி. இவா், தனது நண்பரை பாா்ப்பதற்காக திண்டிவனத்துக்கு வந்திருந்தாா். இந்நிலையில், சனிக்கிழமை திண்டிவனம் தீா்த்தக்குளம் ஏரிக்கரை பகுதியில் நடந்து சென்றபோது,மோகன்ராஜூக்கு திடீா் உடல் நலக்குறைவு ஏற்பட்டு மயங்கி விழுந்தாா்.

இதையடுத்து அருகிலிருந்தவா்கள் அவரை மீட்டு திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு மருத்துவா் பரிசோதித்தபோது, மோகன்ராஜ் ஏற்கெனவே உயிரிழந்திருந்தது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் திண்டிவனம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.