கோயிலில் மயங்கி விழுந்து மூதாட்டி உயிரிழப்பு
திருவெண்ணெய்நல்லூா் அருகே கோயிலுக்கு வழிபாட்டுக்கு சென்ற மூதாட்டி மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.

பிரதிப் படம்
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் அருகே கோயிலுக்கு வழிபாட்டுக்கு சென்ற மூதாட்டி மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.
திருவண்ணாமலை மாவட்டம், வேட்டவலம், தா்மலிங்கம் நகரைச் சோ்ந்தவா் ரா. வெள்ளச்சி (90). இவா், திங்கள்கிழமை திருவெண்ணெய்நல்லூா் அருகேயுள்ள அரசூரில் உள்ள கோயிலுக்கு வழிபாட்டுக்கு வந்திருந்தாா்.
அப்போது கோயில் வளாகத்தில் மயங்கி விழுந்த மூதாட்டி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்த புகாரின் பேரில் திருவெண்ணெய்நல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






