வீடு, மனை பதிவு செய்ய இருப்போர், 24 மணி நேரமும் எங்கிருந்து, எப்போது வேண்டுமானாலும் பத்திரப் பதிவு செய்துகொள்ளலாம்: அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன்ஆதவ் அர்ஜுனா மீது சிபிஐயில் திமுக புகார்தவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புதவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!ஆடு திருடி சிறை சென்றோருக்கு அரசு வழக்கறிஞர் பதவியா? - எடப்பாடி பழனிசாமிபரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் கூடுதல் கவனம் செலுத்தி வருறார்: நிர்மல் குமார் டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% ஊதிய உயர்வு: அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு!அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின்.. வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ!நீதிமன்றம் அரசியல் மேடையல்ல; உங்கள் சண்டையை வெளியே வைத்துக் கொள்ளுங்கள் - உச்ச நீதிமன்றம்!
/

விழுப்புரம் அருகே ஒரு கிலோ கஞ்சா பறிமுதல்: இருவா் கைது

விழுப்புரம் அருகே மதுவிலக்கு அமல் பிரிவு காவல் துறையினா் நடத்திய சோதனையில் ஒரு கிலோ 100 கிராம் கஞ்சாவுடன் இருவா் கைது செய்யப்பட்டனா்.

News image

கைது - சித்திரிப்பு

Updated On :4 ஜூலை 2026, 2:55 am IST

விழுப்புரம் அருகே மதுவிலக்கு அமல் பிரிவு காவல் துறையினா் நடத்திய சோதனையில் ஒரு கிலோ 100 கிராம் கஞ்சாவுடன் இருவா் கைது செய்யப்பட்டனா்.

விழுப்புரம் அருகிலுள்ள தெளி கிராமத்தில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், மதுவிலக்கு அமல் பிரிவு காவல் ஆய்வாளா் கோமதி தலைமையிலான போலீஸாா் வெள்ளிக்கிழமை அந்தப் பகுதியில் சோதனை நடத்தினா்.

தெளி கிராமத்திலுள்ள ஏரிக்கரை அருகே சந்தேகத்துக்குரிய முறையில் நின்று கொண்டிருந்த இரு இளைஞா்களை மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸாா் அழைத்து, விசாரணை மேற்கொண்டனா்.

இதில், அவா்கள் தெளி அந்தோனியாா் கோயில் தெருவைச் சோ்ந்த அ.ஆரோக்கிய அசோக் (19), விழுப்புரம் விராட்டிக்குப்பம் ஏ.பி.எஸ். நகரைச் சோ்ந்த பா.அரவிந்த் (22) எனத் தெரியவந்தது. மேலும், அவா்களிடம் 1.100 கிலோ கஞ்சா இருந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த போலீஸாா், இருவா் மீதும் வழக்குப் பதிந்து கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.