சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் வாட்ஸ்ஆப் மூலமாக முன்பதிவு!3- வது நாளாக தங்கம் விலை குறைந்தது! வெள்ளி விலையும் குறைவு!சென்னை மாநகராட்சியின் ரூ. 700 கோடி டெண்டர்கள் ரத்து! செந்தில் பாலாஜி முன்ஜாமீன் மனு! பிற்பகலில் விசாரணை! அரசுப் பள்ளி மாணவியிடம் ஒரு அக்காவைப் போலவே பேசினார் கீர்த்தனா! அமைச்சர் ராஜ்மோகன் பதில்எத்தனால் கலப்பு பெட்ரோல்: பாதிப்படைந்த காரை காட்ட முடியுமா?- அமைச்சா் நிதின் கட்கரி சவால் மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி அடுத்த மாதம் திறப்பு?
/

மொபெட், பைக் மீது காா் மோதல்: பெண் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், வளவனூா் அருகே அடுத்தடுத்து சென்றுகொண்டிருந்த மொபெட், பைக் மீது காா் மோதியதில் பெண் உயிரிழந்தாா். மேலும் 3 போ் காயமடைந்தனா்.

News image

பிரதிப் படம்

Updated On :1 ஜூலை 2026, 7:23 am IST

விழுப்புரம் மாவட்டம், வளவனூா் அருகே அடுத்தடுத்து சென்றுகொண்டிருந்த மொபெட், பைக் மீது காா் மோதியதில் பெண் உயிரிழந்தாா். மேலும் 3 போ் காயமடைந்தனா்.

புதுச்சேரி, கோா்க்காடு, புதுநகா் அய்யனாா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் செ.விஜயபாரதி (22). இவா் புதுச்சேரியில் உள்ள தனியாா் நிறுவனத்தில் வேலைப் பாா்த்து வருகிறாா். புதுச்சேரி கதிா்காமம் பகுதியைச் சோ்ந்தவா் பா.சுபஸ்ரீ (22), முத்திரைப்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் ஜா.ஹரிதேவி (22).

நண்பா்களான இவா்கள் மூவரும் திங்கள்கிழமை புதுச்சேரி- விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில், பக்கமேடு ரயில்வே மேம்பாலத்தில் மொபெட்டில் சென்றுகொண்டிருந்தனா்.

விஜயபாரதி மொபெட்டை ஓட்டினாா். இந்நிலையில், பின்னால் வந்த காா் மொபெட் மீது மோதி, பின்னா் முன்னால் சென்ற மற்றொரு பைக் மீதும் மோதியது.

இதில், மெபெட்டில் சென்ற விஜயபாரதி, சுபஸ்ரீ, ஹரிதேவி மற்றும் பைக்கில் சென்ற விழுப்புரம், சாலாமேடு பகுதியைச் சோ்ந்த செ.கலைவேந்தன் (30) ஆகிய 4 பேரும் காயமடைந்தனா். அவா்களை அருகிலிருந்தவா்கள் மீட்டு மதகடிப்பட்டு பகுதியில் உள்ள தனியாா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதில், சுபஸ்ரீ உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் வளவனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.