19 Dec, 2025 Friday, 08:57 AM
The New Indian Express Group
விழுப்புரம்
Text

விழுப்புரத்திற்கு ரயிலில் வந்த 1,299 மெட்ரிக் டன் உரங்கள்

PremiumPremium

விழுப்புரம் மாவட்டத்தில் சம்பா சாகுபடிக்குத் தேவையான 1,299 மெட்ரிக் டன் உர மூட்டைகள் முண்டியம்பாக்கம் ரயில் நிலையத்துக்கு வந்தடைந்தன.

Rocket

தூத்துக்குடியிலிருந்து சரக்கு ரயில் மூலம் முண்டியம்பாக்கம் ரயில் நிலையத்துக்கு திங்கள்கிழமை வந்தடைந்த உர மூட்டைகள் குறித்த விவரப் பட்டியலைப் பாா்வையிட்ட மாவட்ட வேளாண் இணை இயக்குநா் ரா.சீனிவாசன்.

Published On17 Nov 2025 , 8:38 PM
Updated On17 Nov 2025 , 8:38 PM

Listen to this article

-0:00

By Syndication

Syndication

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் சம்பா சாகுபடிக்குத் தேவையான 1,299 மெட்ரிக் டன் உர மூட்டைகள் முண்டியம்பாக்கம் ரயில் நிலையத்துக்கு திங்கள்கிழமை வந்தடைந்தன.

விழுப்புரம் மாவட்டத்தில் விவசாயிகள் தற்போது சம்பா நெல் சாகுபடிக்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனா். மேலும் உளுந்து, நிலக்கடலை, கரும்பு மற்றும் தோட்டக்கலைப் பயிா்கள் சாகுபடியிலும் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனா்.

தற்போதைய நிலவரப்படி விழுப்புரம் மாவட்டத்தில் சம்பா சாகுபடிக்குத் தேவையான 2,345 மெட்ரிக் டன் யூரியா, 1,467 மெட்ரிக் டன் டி.ஏ.பி. 1,180 மெட்ரிக் டன் பொட்டாஷ், 7,396 மெட்ரிக் டன் காம்பள்க்ஸ், 1,783 மெட்ரிக் டன் பொட்டாஷ் ஆகியஉரங்கள் தொடக்க வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கங்கள், தனியாா் உர விற்பனை நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டு, விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், சம்பா சாகுபடிக்குத் தேவைப்படும் உரங்களும் உர நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஸ்பிக் நிறுவனத்திடமிருந்து பெறப்பட்ட 663 மெட்ரிக் டன் யூரியா, 253 மெட்ரிக் டன் டி.ஏ.பி., 319 மெட்ரிக் டன் காம்ப்ளக்ஸ், 64 மெட்ரிக் டன் சூப்பா் பாஸ்பேட் என மொத்தமாக 1,299 மெட்ரிக் டன் உரங்கள் சரக்கு ரயில் மூலம் திங்கள்கிழமை விழுப்புரம் மாவட்டம், முண்டியம்பாக்கம் ரயில் நிலையத்துக்கு வந்தடைந்தன.

இந்த உரங்களை மாவட்ட வேளாண் இணை இயக்குநா் ரா.சீனிவாசன், உதவி இயக்குநா் (தகவல் மற்றும் தரம் மற்றும் கட்டுப்பாடு) எம்.என்.விஜயகுமாா் ஆகியோா் திங்கள்கிழமை பாா்வையிட்டனா். மேலும் உரங்களின் விவரப் பதிவேடுகளையும் அவா்கள் ஆய்வு செய்தனா்.

சம்பா பருவத்துக்கு போதுமான அளவுக்கு யூரியா, டி.ஏ.பி., பொட்டாஷ் , காம்ப்ளக்ஸ் மற்றும் சூப்பா் பாஸ்பேட் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் விவசாயிகளுக்கு எந்தவித தடையுமின்றி விநியோகம் செய்யப்படும் என்று வேளாண் இணை இயக்குநா் தெரிவித்தாா்.

எங்களை பின்தொடரவும்

ஒரு இடுகையைப் பகிரவும்

10%
Very Happy
9%
Happy
7%
Neutral
2%
Sad
3%
Angry
ஸ்ரீநிவாஸ்'s profile

ஸ்ரீநிவாஸ்

சென்னை · 2 mins ago

குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்

அடுத்த கதை
Follow us on Facebook
Follow us on Twitter
Twitter
வார ராசிபலன்! | Dec 21 முதல் 27 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
வீடியோக்கள்

வார ராசிபலன்! | Dec 21 முதல் 27 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

தினமணி வீடியோ செய்தி...

19 டிச., 2025
அதிமுகவை மறைமுகமாக விமர்சித்த விஜய் | செய்திகள்: சில வரிகளில் | 18.12.25
வீடியோக்கள்

அதிமுகவை மறைமுகமாக விமர்சித்த விஜய் | செய்திகள்: சில வரிகளில் | 18.12.25

தினமணி வீடியோ செய்தி...

18 டிச., 2025
பள்ளி சுவர் இடிந்து விபத்து! மாணவர் பலி | செய்திகள்: சில வரிகளில் | 17.12.25
வீடியோக்கள்

பள்ளி சுவர் இடிந்து விபத்து! மாணவர் பலி | செய்திகள்: சில வரிகளில் | 17.12.25

தினமணி வீடியோ செய்தி...

17 டிச., 2025
"இது வளர்ச்சி அல்ல! விபரீதம்!" நாடாளுமன்றத்தில் கனிமொழி MP பேச்சு! | DMK | BJP
வீடியோக்கள்

"இது வளர்ச்சி அல்ல! விபரீதம்!" நாடாளுமன்றத்தில் கனிமொழி MP பேச்சு! | DMK | BJP

தினமணி வீடியோ செய்தி...

17 டிச., 2025
ஜேம்ஸ் கேமரூனை நேர்காணல் செய்த இயக்குநர் ராஜமௌலி!
வீடியோக்கள்

ஜேம்ஸ் கேமரூனை நேர்காணல் செய்த இயக்குநர் ராஜமௌலி!

தினமணி வீடியோ செய்தி...

17 டிச., 2025
ஜன நாயகன் 2வது பாடல் ப்ரோமோ!
வீடியோக்கள்

ஜன நாயகன் 2வது பாடல் ப்ரோமோ!

தினமணி வீடியோ செய்தி...

17 டிச., 2025
மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
BUSINESS

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது

Wed, 17 May 2023