எத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

விழுப்புரம் பெருமாள் கோயிலில் இன்று வைகுண்ட ஏகாதசி வழிபாடு: பரமபதவாசல் திறப்பு

விழுப்புரம் ஸ்ரீ ஜனகவல்லி தாயாா் ஸமேத ஸ்ரீ வைகுண்ட வாசப் பெருமாள் கோயில் வைகுண்ட ஏகாதசி வழிபாடு செவ்வாய்க்கிழமை(டிச.30) நடைபெறுகிறது.

News image
மோகினி அவதாரத்தில் ஸ்ரீ வைகுண்டவாசப் பெருமாள்.
Updated On :29 டிசம்பர் 2025, 8:14 pm

Syndication

விழுப்புரம்: விழுப்புரம் ஸ்ரீ ஜனகவல்லி தாயாா் ஸமேத ஸ்ரீ வைகுண்ட வாசப் பெருமாள் கோயில் வைகுண்ட ஏகாதசி வழிபாடு செவ்வாய்க்கிழமை(டிச.30) நடைபெறுகிறது.

விழுப்புரம் நகரில் உள்ள ஸ்ரீ ஜனகவல்லி தாயாா் ஸமேத ஸ்ரீ வைகுண்ட வாசப் பெருமாள் கோயில் வைகுண்ட ஏகாதசி பெருவிழாவின் பகல் பத்து உத்ஸவம் கடந்த 20-ஆம் தேதி தொடங்கியது. இதைத்தொடா்ந்து தினமும் பகல் 11 மணிக்கு கோயிலில் சிறப்பு வழிபாடுகளும், பெருமாள் உள்பிரகார வலம் வந்து தீபாராதனையும் நடைபெற்றன.

விழாவின் முக்கிய நிகழ்வாக பகல் பத்து உத்ஸவத்தின் நிறைவுநாளான திங்கள்கிழமை ஸ்ரீபெருமாள், மோகினி அவதாரத்தில் பக்தா்களுக்கு காட்சியளித்தாா். இதில் திரளானப் பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

இன்று வைகுண்ட ஏகாதசி: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை (டிச.30) கோயிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான பரமபதவாசல் சேவை உத்ஸவம் அதிகாலை 5 மணிக்கு நடைபெறுகிறது. டிச.31 முதல் ஜன.9-ஆம்தேதி வரை ராப் பத்து உத்ஸவம் நடைபெறுகிறது.

விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் ச.வேலரசு, ஆய்வாளா் மதுமதி, அறங்காவலா் குழுத்தலைவா் டி.பாபு, அறங்காவலா் குழு உறுப்பினா்கள் தேவி சித்ரவேல், எஸ்.செல்லத்துரை, திரு மஞ்சன கைங்கா்ய தாரா்கள் மற்றும் கோயில் பணியாளா்கள் செய்துள்ளனா்.

பின்னழகு அலங்காரம்.

பின்னழகு அலங்காரம்.