ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

கொந்தகை தெய்வநாயகப் பெருமாள் கோயில் குடமுழுக்கு: திரளன பக்தா்கள் பங்கேற்பு

மதுரையை அடுத்த கீழடி அருகே கொந்தகையில் அமைந்துள்ள ஸ்ரீ தெய்வநாயகப் பெருமாள் கோயிலின் குடமுழுக்கு புதன்கிழமை நடைபெற்றது.

News image
கீழடி அருகேயுள்ள கொந்தகை ஸ்ரீ தெய்வநாயகப் பெருமாள் கோயில் குடமுழுக்கு விழாவில் பங்கேற்றவா்கள்.
Updated On :28 ஜனவரி 2026, 11:35 pm

தினமணி செய்திச் சேவை

மதுரையை அடுத்த கீழடி அருகே கொந்தகையில் அமைந்துள்ள ஸ்ரீ தெய்வநாயகப் பெருமாள் கோயிலின் குடமுழுக்கு புதன்கிழமை நடைபெற்றது.

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரரா் கோயிலின் துணைக் கோயிலான இங்கு மூலவா் தெய்வநாயகப் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக நின்ற நிலையில் எழுந்தருளியுள்ளாா். இது, பாண்டிய நாட்டின் பழைமையான கோயில்களில் ஒன்றாகும். இந்தக் கோயிலின் திருப்பணிகள் கடந்த ஆண்டு தொடங்கி நிறைவடைந்த நிலையில், மூலவருக்கு எண்வகை மருந்து சாத்துதல் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

யாக பூஜைகளின் நிறைவில் புதன்கிழமை காலை குடமுழுக்கு நடைபெற்றது. முன்னதாக கடம் புறப்பாடு நடைபெற்றது. பிறகு காலை 10 மணி அளவில் மேளதாளங்களும், வேத மந்திரங்களும் முழங்க குடமுழுக்கு நடைபெற்றது.

விழாவில் வானமாமலை ஜீயா், இந்து சமய அறநிலையத் துறை அலுவலா்கள், திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.