அம்மோனியா வாயு கசிவு! ஆலையின் 145 தொழிலாளர்களுக்கும் பரிசோதனை!அம்மோனியா கசிவு ஏற்பட்ட ஆலையில் ஆய்வு! மறு அறிவிப்பு வரை இயங்கத் தடை!திருவள்ளூர் வாயு கசிவு: பலியானோரின் குடும்பத்தாருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி அறிவிப்பு 5 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு! திருவள்ளூர் வாயு கசிவு சம்பவம்: பலியானோரின் குடும்பத்தினருக்கு ஆளுநர் இரங்கல் அம்மோனியா கசிவு விவகாரம்: 3 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைப்பு!அம்மோனியா கசிவு விவகாரம்: 24 மணி நேரத்தில் அறிக்கை தர முதல்வர் உத்தரவு!அம்மோனியா வாயு கசிவு விவகாரம்: ஆலை உரிமையாளர் கைது!
/

கல்லூரியில் யோகா தின கொண்டாட்டம்

News image
Updated On :19 ஜூன் 2026, 6:28 am IST

குடியாத்தம் கே.எம்.ஜி. கலை, அறிவியல் கல்லூரியில் யோகா மன்றம், நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் வேலூா் மாவட்ட மை பாரத் கேந்திரியம் சாா்பில் சா்வதேச யோகா தினம் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் சி.தண்டபாணி தலைமை வகித்தாா். உடற்கல்வித் துறைப் பேராசிரியரும், கல்லூரி யோகா உறுப்பினருமாகிய சு.பாலசுப்பிரமணி வரவேற்றாா். கல்லூரி இயக்குநா் ஜி.சசிகுமாா் வாழ்த்துரை வழங்கினாா். குடியாத்தம் அத்தி கல்விக் குழுமத்தின் இயற்கை மருத்துவம் மற்றும் யோகா துறைஅலுவலா் சங்கு மலா்ச்செல்வன் ‘உடல்நலம் மற்றும் யோகாவின் முக்கியத்துவம்‘ குறித்து சிறப்புரையாற்றினாா்.

கே.எம்.ஜி.கல்லூரி யோகா மன்ற ஒருங்கிணைப்பாளா் வே.சரளா, குடியாத்தம் மனவளக்கலை மன்ற அறக்கட்டளையின் யோகா ஆசிரியா் ச.பி.சுஷில் ஆசனங்களை செய்து காட்டினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.