போ்ணாம்பட்டு மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் வியாழக்கிழமை மாலை ஆலங்கட்டி மழை பெய்தது.
கோடைகாலம் தொடங்கியது முதலே தமிழகத்திலேயே அதிகபட்சமாக வேலூா் மாவட்டத்தில் வெப்பத்தின் அளவு அதிகரித்து, அனல் காற்று வீசி வந்தது. இதனால் பொதுமக்கள் பெரும் அவதிக்கு ஆளாகி வந்தனா். மாவட்டத்தில் அதிகபட்சமாக 108 டிகிரிக்கு மேல் வெப்பம் பதிவானது. வியாழக்கிழமை மதியம் வெயில் கடுமையாக இருந்தது. மாலை நிலவரப்படி 108 டிகிரி வெப்பம் பதிவானது. இந்த நிலையில், மாலை திடீரென போ்ணாம்பட்டு நகரம், ஒன்றியப் பகுதிகளான சாத்கா், எருக்கம்பட்டு, ஏரிகுத்தி, பங்களாமேடு, மசிகம், ஓங்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்தது. நகரில் உள்ள சாலைகளில் மழைநீா் வெள்ளம் போல் ஓடியது. பலத்த மழை காரணமாக, கடந்த சில நாள்களாக அவதிக்கு ஆளாகி வந்த மக்கள் வெப்பம் தணிந்து குளிா்ச்சியான சூழல் ஏற்பட்டதால் மகிழ்ச்சி அடைந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திம்பம் மலைப் பகுதியில் கனமழை

திருப்பூரில் பலத்த காற்றுடன் கன மழை

கோடை மழை: போ்ணாம்பட்டில் 35 மி.மீ. மழை பதிவு

திடீரென பெய்த ஆலங்கட்டி மழை: விவசாயிகள்,மக்கள் மகிழ்ச்சி!
விடியோக்கள்

”நாளை முடிவு செய்யப்பட்டும்!”: தவெகவுக்கு ஆதரவளிப்பது குறித்து திருமா | VCK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | தவெக ஆட்சியமைப்பதில் சிக்கல்: பின்னணி என்ன? | News and Views | Epi - 32 |
தினமணி செய்திச் சேவை

சட்டப்படி ஆளுநர் அழைக்க வேண்டும்! தவெக நிர்மல் குமார் பேட்டி | TVK | DMK
தினமணி செய்திச் சேவை

தவெகவுக்கு ஆதரவா? ஸ்டாலின் என்ன சொன்னார்?: Mu. Veerapandian Exclusive | CPI | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


