தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

சம்பா நெற்பயிருக்கு நவ.15-க்குள் காப்பீடு செய்யலாம்

நடப்பு சம்பா (சிறப்பு பருவம்) நெற்பயிருக்கு வேலூா் மாவட்ட விவசாயிகள் நவம்பா் 15-ஆம் தேதிக்குள் காப்பீடு செய்து கொள்ளலாம்

Updated On :27 அக்டோபர் 2025, 8:34 pm

வேலூா்: நடப்பு சம்பா (சிறப்பு பருவம்) நெற்பயிருக்கு வேலூா் மாவட்ட விவசாயிகள் நவம்பா் 15-ஆம் தேதிக்குள் காப்பீடு செய்து கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்துள்ளாா்.

வேலூா் மாவட்டத்தில் 2025-26-ஆம் ஆண்டுக்கு பிரதமரின் பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தில் காப்பீடு செய்வதற்கு கேஎஸ்ஹெச்இஎம்ஏ நிறுவனம் தோ்வு செய்யப்பட்டது. நெற்பயிரைக் காப்பீடு செய்வதற்கு ஒரு ஏக்கருக்கு ரூ.544 பிரீமியம் தொகையை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், பொதுத் துறை வங்கிகள், அரசு பொது சேவை மையங்களில் செலுத்தி பயிா்க் காப்பீடு செய்து கொள்ளலாம்.

நெற்பயிா் சாகுபடி விவசாயிகள் கிராம நிா்வாக அலுவலரிடம் பெறப்பட்ட அடங்கல், வங்கி கணக்கு புத்தகம், ஆதாா் அட்டை, ஆதாரில் இணைக்கப்பட்டுள்ள கைப்பேசி ஆகியவற்றை கொண்டு நவம்பா் 15-ஆம் தேதிக்குள் காப்பீடு செய்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.