சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

விவசாயிகளுக்கு பயனளிக்காத கொடியாளம் அணை!

ஒசூர் ஆக. 21: விவசாயிகளுக்கு பயனளிக்காமல் உள்ள கொடியாளம் அணையில், தண்ணீர் தேக்கி வைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.  கர்நாடக மாநிலம் நந்தி கில்ஸ் மலைப் பக

News image
Updated On :27 டிசம்பர் 2023, 5:12 pm

டி.ஞானபிரகாசம்

ஒசூர் ஆக. 21: விவசாயிகளுக்கு பயனளிக்காமல் உள்ள கொடியாளம் அணையில், தண்ணீர் தேக்கி வைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

 கர்நாடக மாநிலம் நந்தி கில்ஸ் மலைப் பகுதியில் உருவாகும் தென்பெண்ணை ஆறு ஒரத்தூர் ஏரி வழியாக, தமிழக எல்லையிலுள்ள கொடியாளம் கிராமத்தில் நுழைந்து கெலவரப்பள்ளி அணையை கடந்து கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணைக்கு செல்கிறது.

 இந்நிலையில், கொடியாளம் கிராமத்தில் 1972-ல் உந்துநீர் பாசனத் திட்டத்தின் கீழ் |60 லட்சம் செலவில் சுமார் 150 ஏக்கர் பரப்பில் கொடியாளம் அணையை தமிழக அரசு கட்டியது. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் மழை நீரை இந்த அணையில் தேக்கி, மின் மோட்டார் மூலம் விவசாய நிலங்களுக்கு பாசனம் செய்வதுதான் இத் திட்டத்தின் நோக்கம்.

 இந்த அணை மூலம் கொடியாளம், கொத்தப்பள்ளி, கக்கதாசம், சேவகானப்பள்ளி, சொக்கரனப்பள்ளி, பாகலூர் உள்ளிட்ட 12 கிராமங்களிலுள்ள சுமார் 1,600 ஏக்கர்  பாசன வசதி பெற முடியும் எனத் தெரிவிக்கப்பட்டது.

 இந்த அணையின் மட்டத்தை உயர்த்திக் கட்டினால் கர்நாடக மாநிலத்தில் உள்ள விவசாய நிலங்கள் தண்ணீரில் மூழ்கிவிடும் என அணை கட்டுமானப் பணி தொடக்கத்தின்போது கர்நாடக விவசாயிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

இதையடுத்து அந்த அணையை முழுமையாக கட்டாமல் தரை மட்டம் வரையில் கட்டியதுடன், பணியை மேலும் தொடராமல் கிடப்பில் போடப்பட்டுவிட்டது.  இதனால் தண்ணீரை முழுமையாகத் தேக்கி வைக்க முடியாத நிலை உள்ளதால், மழை நீர் முழுவதும் கெலவரப்பள்ளி அணைக்கு செல்கிறது.   தொழில் நுட்பக் கோளாறு காரணமாக இந்த அணையின் மட்டத்தை உயர்த்த  முடியவில்லை என தமிழக பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

 கட்டி முடித்து 40 ஆண்டுகாலம் ஆகியும் இந்த அணை கட்டியதன் நோக்கமே நிறைவேறவில்லை என்கின்றனர் விவசாயிகள்.

 இதுகுறித்து பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் சுந்தரம கூறியது:

 கொடியாளம் அணைக் கட்டுமானப் பணி 80 சதவீதம் முடிவடைந்து விட்டது. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் தண்ணீர் கொடியாளம் அணையில் தேக்கி வைக்க முடியாது. வரும் தண்ணீர் அப்படியே கெலவரப்பள்ளி அணைக்குச் சென்றுவிடும். அங்கு 481 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்க முடியும். பின்னர் அங்கிருந்து கே.ஆர்.பி. அணைக்கு தண்ணீர் செல்லும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.