சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய சிறப்புக் கோட்டம் மூடப்படுகிறது

 ஒசூர், செப்.21: தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் புதியதாக தொடங்கப்பட்ட சிறப்புக் கோட்டங்களை தமிழக அரசு மூட உத்தரவிட்டுள்ளது.  தொழில் நகரங்களான கோவை மற்றும் ஒசூர் ஆகியவற்றில் தமிழ்நாடு வீட்டு வசதி வா

News image
Updated On :25 டிசம்பர் 2023, 3:42 pm

டி.ஞானபிரகாசம்

 ஒசூர், செப்.21: தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் புதியதாக தொடங்கப்பட்ட சிறப்புக் கோட்டங்களை தமிழக அரசு மூட உத்தரவிட்டுள்ளது.

 தொழில் நகரங்களான கோவை மற்றும் ஒசூர் ஆகியவற்றில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.

 இந்நகரங்களில் அதிக எண்ணிக்கையில் வசித்துவரும் தொழிலாளர்களுக்கு வீடுகளைக் கட்டித் தர வீட்டுவசதி வாரிய அமைச்சராக இருந்த சுப.தங்கவேலன் சிறப்புக் கோட்டங்களைத் தொடங்கினார். அதைத் தொடர்ந்து ஒசூரில் சிறப்புக் கோட்டங்களுக்கான அலுவலகங்கள் செயல்பட்டு வந்தன.

 முதன்மை செயற்பொறியாளர், உதவி பொறியாளர், கணக்காளர், காசாளர், சர்வேயர், எழுத்தர், உதவியாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு நியமனம் செய்யப்பட்டு பணிகள் நடந்து வந்தன.

 ஏற்கெனவே ஒசூரிலும், கோவையிலும் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய அலுவலகங்கள் (மெயின் டிவிஷன்) முழுமையாகச் செயல்பட்டு வந்த நிலையில், சிறப்புக் கோட்டம் அவசியமா? என கேள்வி எழுந்தது.

 இந்நிலையில் ஒசூர் சிறப்புக் கோட்டம் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய மாளிகையில் குளிர்சாதன வசதியுடன் கூடிய செயற்பொறியாளர் அலுவலகம் ஓராண்டாக செயல்பட்டு வந்தது.

 ஒசூர் சிறப்புக் கோட்டத்தில் பாகலூர் அட்கோ பகுதி 6 மற்றும் பகுதி 7 ஆகியவற்றில் சுயநிதி திட்டத்தின் கீழ் (பயனாளிகளிடம் இருந்து முழுத் தொகையும் பெற்றுக் கொண்டு வீட்டுவசதி வாரிய நிலத்தில் வீடு கட்டிக் கொடுக்கும் திட்டம்) அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் தனி வீடுகள் கட்டப்பட்டன.

 சிறப்புக் கோட்டத்தின் மூலம் ரூ.450 கோடியில் புதிய புதிய திட்டத்தின் கீழ் மத்திய வருவாய் பிரிவு, உயர் வருவாய்ப் பிரிவு உள்ளிட்ட வீடுகள் கட்டப்பட்டன.

 ஆனால் பழைய வீட்டு வசதி வாரியம் (மெயின் டிவிஷன்) மூலம் கோகுல் நகர் அருகில் ஒரு பகுதியில் மட்டும் புதிய வீடுகள் கட்டப்பட்டன. அத்துடன் பழைய வீடுகளையும், வீட்டு மனைகளையும், வர்த்தக மனைகளையும் மட்டுமே இப்பிரிவு விற்பனை செய்து வந்தது.

 மெயின் டிவிஷன் அலுவலகத்தில் போதிய பணிகள் இல்லாத சூழலில், சிறப்புக் கோட்டம் தேவை இல்லை என்ற முடிவை வாரியம் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

 சிறப்புக் கோட்டத்தில் பணியாற்றி வந்த ஒரு சில அலுவலர்கள் ஒப்பந்ததார்களுடனும், பயனீட்டாளர்களுடனும் சிண்டிகேட் அமைத்து செயல்பட்டதாகவும், பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளதாக வீட்டு வசதி வாரிய தலைமை அலுவலகத்திற்கு புகார்கள் சென்றதை அடுத்து சிறப்புக் கோட்டம் மூடப்படுகிறது என்றும் அலுவலக வட்டாரத்தினர் கூறுகின்றனர்.

 இதுகுறித்து ஒசூர் சிறப்புக் கோட்ட செயற்பொறியாளர் எம்.நடேசனிடம் கேட்டபோது, "தமிழக அரசு ஒசூர் மற்றும் கோவை தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய சிறப்புக் கோட்டங்களை மூட முடிவு செய்துள்ளது. இதனால் இதுவரை ஒசூர் சிறப்புக் கோட்டத்தில் செயற்பொறியாளராக பணியாற்றி வந்த என்னை திருநெல்வேலிக்கு பணி மாறுதல் செய்துள்ளனர்.

 சிறப்புக் கோட்டத்தின் பணிகளை இனி ஒசூர் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய செயற்பொறியாளரிடம் (மெயின் டிவிஷன்) செவ்வாய்க்கிழமை ஒப்படைக்கவுள்ளேன் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.