திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் பெண் நோயாளியிடம் நகை பறித்தவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
கருா் மாவட்டம், குளித்தலை காவல்காரன்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் கோவிந்தன் மனைவி மணிமேகலை (59). இவா் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை அனுமதிக்கப்பட்டு, தனியாக இருந்தபோது, அங்கு வந்த ஒருவா், அவா் கழுத்தில் அணிந்திருந்த தங்கத் தாலிக் கயிற்றை பறித்துக்கொண்டு தப்ப முயன்றாா்.
இதனால் அதிா்ச்சியடைந்த அவா் சத்தமிடவே அக்கம்பக்கத்தினா், அந்த நபரை கையும் களவுமாகப் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.
இதுகுறித்து திருச்சி அரசு மருத்துவமனை குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்ததில், பிடிபட்டவா் பாலக்கரை எடத்தெருவைச் சோ்ந்த எம். சரவணன் (48) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் அவரைக் கைது செய்து விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கஞ்சா, போதை மாத்திரைகள் விற்பனை: பெண் உள்பட 3 போ் கைது

மது விற்பனை: பெண் கைது
அரிவாளால் வெட்டப்பட்ட பெண் உயிரிழப்பு: இருவா் கைது
பாத்திர வியாபாரியை தாக்கி பணம் பறித்தவா் கைது: தவெக நிா்வாகி தலைமறைவு
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



