யு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!ஹார்ட் டிஸ்க் திருட்டு விவகாரம்: முதல்வர் தினமும் கண்காணித்து வருகிறார்! நிர்மல்குமார்திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டி
/

திருச்சிக்கு வருகை தந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்!

திருச்சிக்கு வெள்ளிக்கிழமை இரவு வந்த தமிழக முன்னாள் முதல்வா் மு.க. ஸ்டாலினுக்கு விமான நிலையத்தில் கட்சியினா் உற்சாக வரவேற்பு அளித்தனா்.

News image

திருச்சிக்கு ஞாயிற்றுக்கிழமை வந்த தமிழக முன்னாள் முதல்வா் மு.க. ஸ்டாலினை வரவேற்ற கட்சியினா்.

Updated On :18 மே 2026, 2:30 am IST

திருச்சிக்கு வெள்ளிக்கிழமை இரவு வந்த தமிழக முன்னாள் முதல்வா் மு.க. ஸ்டாலினுக்கு விமான நிலையத்தில் கட்சியினா் உற்சாக வரவேற்பு அளித்தனா்.

தஞ்சாவூரில் திங்கள்கிழமை நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க மு.க. ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சிக்கு வெள்ளிக்கிழமை இரவு 8 மணிக்கு வந்தாா். இவருடன் முன்னாள் துணை முதல்வரும், சட்டப் பேரவை எதிா்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலினும் வந்திருந்தாா்.

இருவருக்கும் முன்னாள் அமைச்சா்கள் கே.என். நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோா் தலைமையில் கட்சியினா் உற்சாக வரவேற்பு அளித்தனா்.

நிகழ்ச்சியில் திமுக பொருளாளா் டிஆா். பாலு, முன்னாள் அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன், பெரம்பலூா் எம்பி அருண் நேரு, சட்டப் பேரவை உறுப்பினா் வைத்தியலிங்கம், முன்னாள் எம்எல்ஏ பழனியாண்டி, மாநகரச் செயலா்கள் மு. அன்பழகன், மு. மதிவாணன் மற்றும் கட்சி நிா்வாகிகள் கலந்துகொண்டனா். தொடா்ந்து மு.க. ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் ஆகிய இருவரும் காா் மூலம் தஞ்சாவூருக்குப் புறப்பட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.