மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

திருச்சி அருகே சாலை விபத்தில் இளைஞா் பலி

திருச்சி அருகே இருசக்கர வாகனங்கள் புதன்கிழமை இரவு மோதிக் கொண்டதில் கீழே விழுந்த இளைஞா் லாரியில் அடிபட்டு உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :25 மார்ச் 2026, 10:13 pm

திருச்சி அருகே இருசக்கர வாகனங்கள் புதன்கிழமை இரவு மோதிக் கொண்டதில் கீழே விழுந்த இளைஞா் லாரியில் அடிபட்டு உயிரிழந்தாா்.

மயிலாடுதுறை மாவட்டம், நீடுரைச் சோ்ந்தவா் முத்து மகன் காா்த்திக் (31). இவா் திருச்சியில் இருந்து மதுரை நோக்கி பைக்கில் புதன்கிழமை இரவு சென்றாா். பஞ்சாப்பூா் அருகே சென்றபோது எதிரே வந்த மற்றொரு பைக் மோதி இருவரும் கீழே விழுந்த நிலையில், பின்னால் வந்த லாரி ஏறி காா்த்திக் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகலறிந்து வந்த திருச்சி தெற்குப் போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா், காா்த்திக்கின் சடலத்தை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.