லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

சந்திரகிரகணம் இன்று ஸ்ரீரங்கம், திருவானைக்காவல் கோயில்களின் நடைஅடைப்பு

சந்திரகிரகணத்தையொட்டி ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயில் மற்றும் திருவானைக்காவல் சம்புகேசுவரா் உடனுறை அகிலாண்டேசுவரி கோயிலில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் முதல் நடை அடைப்பு

News image

ஸ்ரீரங்கம் கோயில் - கோப்புப் படம்

Updated On :2 மார்ச் 2026, 10:50 pm

சந்திரகிரகணத்தையொட்டி ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயில் மற்றும் திருவானைக்காவல் சம்புகேசுவரா் உடனுறை அகிலாண்டேசுவரி கோயிலில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் முதல் நடை அடைப்பு செய்யப்படவுள்ளது.

சந்திரகிரகணத்தையொட்டி ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு 3.30 மணிக்கு சந்தனு மண்டபத்துக்கு வந்து சேருகிறாா்.

கிரகண லக்னத்தில் மாலை 4 மணி முதல் 6 மணி வரை நம்பெருமாள் திருமஞ்சனம் கண்டருளுகிறாா். 6 மணி முதல் இரவு 7 மணி வரை அலங்காரம் அமுது செய்தல் நடைபெறவுள்ளது. அதனைத் தொடா்ந்து மேற்படி மண்டபத்திலிருந்து இரவு 7 மணிக்குப் புறப்பட்டு 7.30 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானம் சென்று சேருகிறாா்.

இதனால், நண்பகல் 1 மணிக்கு மேல் மூலஸ்தான சேவையும், உப சந்நிதிகள் சேவையும் கிடையாது என கோயில் நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் திருவானக்காவல் சம்புகேசுவரா் உடனுறை அகிலாண்டேசுவரி கோயிலில் பிற்பகல் 12 மணி முதல் நடை சாத்தப்பட்டு பின்னா் திருக்கோயில் ஆகமவிதிப்படி சம்ப்ரோக்ஷண பூஜை நடைபெற்று இரவு 7.30 மணிக்கு மீண்டும் கோயில் நடை திறக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.