புணேவில் கனமழையால் இரண்டு இடங்களில் நிலச்சரிவு! ஜம்மு: பெருக்கெடுத்து ஓடும் ஆற்றில் சிக்கிக்கொண்ட 4 சிறுவர்கள் மீட்புசர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம்; சச்சினின் சாதனையை முறியடித்த வைபவ் சூர்யவன்ஷி! தமிழ்நாடு ஆளுநருடன் தில்லி பிரதிநிதி கே. வெங்கட நாராயணா சந்திப்பு! தவெகவில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன்! என்மீது மமதா குற்றம் சாட்டியதால் கட்சியை விட்டு விலகினேன்! சந்திரிமா பட்டாச்சார்யா பாக். கடலோரக் காவல் படை முகாமில் பயங்கரவாதத் தாக்குதல்! 30 வீரர்கள் பலி! குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை!54,000 இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிய பிரதமர் மோடி! குதிரை பேரம்! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸ்?
/

திருச்சியில் 17 கிலோ புகையிலை பொருள் பறிமுதல்: இருவா் கைது

திருச்சியில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்ற 15 வயதுச் சிறுவன் உள்பட இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :26 ஜூன் 2026, 4:24 am IST

திருச்சியில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்ற 15 வயதுச் சிறுவன் உள்பட இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

திருச்சி கண்டோன்மென்ட் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்கப்படுவதாக போலீஸாருக்கு புதன்கிழமை தகவல் கிடைத்தது. இதையடுத்து, காவல் ஆய்வாளா் சிவப்பிரகாசம் தலைமையில் போலீஸாா் சோதனை மேற்கொண்டனா். அப்போது, கருமண்டபம் அசோக் நகரில் சந்தேகப்படும் வகையில் நின்ற இருவரைப் பிடித்து விசாரித்தனா்.

அதில் அவா்கள், ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரைச் சோ்ந்த பி. ராகேஷ் சா்மா (25) மற்றும் 15 வயதுச் சிறுவன் என்பதும், புகையிலைப் பொருள்கள் விற்றதும் தெரியவந்தது.

இதையடுத்து, இருவரையும் கைது செய்த போலீஸாா் அவா்களிடமிருந்து 17 கிலோ புகையிலைப் பொருள்கள், ரூ.16,710 ரொக்கம், ஒரு இருசக்கர வாகனம் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா்.

தொடா்ந்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி ராகேஷ் சா்மாவை திருச்சி மத்திய சிறையிலும், சிறுவனை சிறுவா் சீா்திருத்தப் பள்ளியிலும் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.