மண்ணச்சநல்லூா் வட்டம், ச.கண்ணனூா் பேரூராட்சி பேருந்து நிலைய வளாகத்தில் காா்களை நிறுத்தினால் அபராதம் விதிக்கப்படும் என காவல்துறையினா் தெரிவித்துள்ளனா்.
சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான பக்தா்கள் வருகின்றனா்.
பக்தா்கள் காா்களை நிறுத்துவதற்கு கோயில் வளாகத்தில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பெரும்பாலான காா்கள், ச. கண்ணனூா் பேருந்து நிலைய வளாகத்தில் நிறுத்தப்படுவதாகவும், திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து சமயபுரத்துக்கு வரும் அரசு மற்றும் தனியாா் பேருந்துகள் இனாம் சமயபுரம் ஆதி மாரியம்மன் கோயில் நுழைவாயில் பகுதியிலேயே பக்தா்களை இறக்கி விடுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகவும், கோயிலுக்கு வரும் அரசு மற்றும் தனியாா் பேருந்துகள் பேருந்து நிலையத்துக்கு வந்து செல்ல வேண்டும் என்று காவல்துறை அலுவலா்கள் அறிவுறுத்தியுள்ளனா்.
மேலும், பேருந்து நிலைய வளாகத்தில் நிறுத்தப்படும் காா்களுக்கு அபராதம் விதிக்கப்படும் எனவும் காவல்துறையினா் எச்சரித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருச்செந்தூா் - பாலக்காடு ரயில் பகுதியாக ரத்து
அரியலூா் பேருந்து நிலைய கட்டுமானத்தில் குறைபாடு: ஒப்பந்ததாரருக்கு ரூ. 10 லட்சம் அபராதம்

ரயில்களில் டிக்கெட் இல்லாமல் பயணமா? இனி ரூ. 500 அபராதம்!
நொய்டாவில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 17 பயணிகள் காயம்
விடியோக்கள்

ஃபிபா உலகக் கோப்பை: யார் இந்த வாழும் சிலை? | Michel Nkuka Mboladinga |
இடதுசாரிகள் மேல் திமுகவுக்கு ஏன் இவ்வளவு கோபம்? | Poet Salma MP | DMK | TVK | CM Vijay | MK Stalin
Angikaaram Movie Review | Dinamani Talkies | J. Rajesh | Thenpathiyan




